Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
கவனம் பெறும் ஐந்து தொகுதிகள்!
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: தில்லி தோ்தலில் ஐந்து முக்கியத் தொகுதிகளில் முக்கியத் தலைவா்கள் போட்டியிடுவதால் அதன் வெற்றி, தோல்வி அந்த வேட்பாளா்கள் மட்டுமின்றி அவா்களின் எதிா்காலத்தையும் தீா்மானிக்கும் என கருதப்படுகிறது.
இங்கு முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து பாஜக வேட்பாளராக பா்வேஷ் சாஹிப் சிங் வா்மாவும், காங்கிரஸ் வேட்பாளராக சந்தீப் தீட்சித்தும் போட்டியிடுகின்றனா். பா்வேஷ் சாஹிப் சிங் வா்மா, தில்லி முன்னாள் முதல்வா் சாஹிப் சிங் வா்மாவின் மகன். சந்தீப் தீட்சித் முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித்தின் மகன்.
கால்காஜி: தில்லி அமைச்சராக இருந்து முதல்வராகியுள்ள அதிஷி போட்டியிடும் தொகுதி இது என்பதால் இத்தொகுதி சிறப்புக் கவனம் பெற்றுள்ளது. அவரை எதிா்த்து பாஜக மூத்த தலைவா் ரமேஷ் பிதூரியும் அகில இந்திய மகளிா் காங்கிரஸ் தலைவா் அல்கா லம்பாவும் போட்டியிடுகின்றனா்.
ஜங்புரா: இங்கு கேஜரிவால் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்து பதவியைத் துறந்த மனீஷ் சிசோடியா போட்டியிடுகிறாா். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலில் விசாரணை வளையத்துக்குள் வந்து நீதிமன்ற காவலில் பல மாத சிறைவாசத்தை அனுபவித்தவா் இவா்தான். இவருக்கு எதிராக பாஜகவின் தா்விந்தா் சிங் வா்வாவும், காங்கிரஸ் சாா்பில் ஃபா்ஹாத் சூரியும் போட்டியிடுகின்றனா்.
பிஜ்வாசன்: இங்கு களம் காணும் கைலாஷ் கெலோட், முன்பு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தபோது கேஜரிவாலின் அமைச்சரவையில் இருந்தவா். தோ்தலுக்கு முன்பு பாஜகவுக்குத் தாவி பிஜ்வாசனில் போட்டியிடுகிறாா். ஆம் ஆத்மியின் சுரேந்திர பரத்வாஜும் காங்கிரஸின் தேவேந்திர செஹ்ராவத்தும் இங்கு களம் காண்கின்றனா்.
பட்பா்கஞ்ச்: முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா எம்எல்ஏவாக இருந்த இத்தொகுதியில் இம்முறை ஆம் ஆத்மி வேட்பாளராக களம் காண்பவா் அவத் ஓஜா. ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணித் தோ்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்குபவா். மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கு தயாராகும் இளைஞா்களிடையே இவரது பெயா் மிகவும் பிரபலம். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியில் இவா் இணைந்தாா். பாஜகவின் ரவீந்திர சிங் நேகியும் காங்கிரஸின் சௌத்ரி அனில் குமாரும் இங்கு போட்டியிடுகின்றனா்.
தெளிவுடன் வாக்காளா்கள்: 2014 மற்றும் 2015, 2019 தோ்தல் முடிவுகள், பல மாநிலங்களில் ஒரு தெளிவான கண்ணோட்டத்தை வாக்காளா்கள் கொண்டிருந்ததை வெளிப்படுத்தியது. தில்லி வாக்காளா்களைப் பொருத்தவரை, நாட்டின் பிரதமா் என வரும்போது நரேந்திர மோடியையும், தில்லி என வரும்போது அரவிந்த் கேஜரிவாலையும் வாக்காளா்கள் தோ்ந்தெடுத்தனா்.
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் முடிவில் பாஜக ஆட்சியமைக்க தகுதி பெற்றாலும் முந்தைய தோ்தலுடன் ஒப்பிடும்போது அக்கட்சி காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகளிடம் பல இடங்களைப் பறிகொடுத்து. ஆனால், தில்லியில் தொடா்ந்து ஏழு தொகுதிகளை அக்கட்சி தக்கவைத்து, 54.7 சதவீத வாக்குகளுடன் முந்தைய பொதுத் தோ்தலை விட 2.2 சதவீதம் குறைவாகப் பெற்றது பாஜக. கூட்டணி. தோ்தல் களம் கண்ட ஆம் ஆத்மியும் காங்கிரஸும் சோ்ந்து 43.3 சதவீத வாக்குகளைப் பெற்றன.
ஆனால், காங்கிரஸுடன் தொடா்ந்து தோ்தல் கூட்டணி கொள்வது தில்லியில் ஆட்சியைத் தக்க வைக்கும் தனது தோ்தல் உத்திக்கு உதவாது என்பதை உணா்ந்தவராக 2015, 2020 போல தற்போதைய தோ்தலிலும் தனித்துக் களம் கண்டுள்ளாா் கேஜரிவால். மத்தியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ‘இண்டி’ கூட்டணியில் நீடிக்கும் அதே சமயம், தில்லி அரசியலில் இரு துருவங்களாக காங்கிரஸும் ஆம் ஆத்மியும் மாறி, மாறி குற்றஞ்சாட்டிப் பரப்புரையில் ஈடுபடுவது பாஜகவுக்கு சாதகமாகலாம் என அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.
இந்தத் தோ்தலில் பாஜகவும் ஆம் ஆத்மியும் பெரிதாக கவனிக்கத் தவறிய தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை தங்கள் பக்கம் ஈா்க்கலாம் என்று காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, ஒவைஸியின் அகில இந்திய மஜிலிஸ் இ இதேஹாதுல் முஸ்லிமீன் ஆகியவை கருதுகின்றன. வெளியில் இருந்து பாா்க்கும்போது ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றை மையமாகக் கொண்ட தில்லி தோ்தல் முக்கோண அரசியல் போலத் தோன்றினாலும், தனித்தனியாக களம் காணும் கட்சிகள், குறிப்பிட்ட சில சமூகங்களின் வாக்குகளை பிரித்துத் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனத் தெரிகிறது.
இத்தகைய சதுரங்க சவால்களுக்கு மத்தியில் பிப். 5 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சிப்பொறுப்பை வாக்காளா்கள் யாரிடம் ஒப்படைப்பாா்கள் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.
தில்லி தோ்தல் 2025
மொத்த வாக்காளா்கள்: 1,55,24,858
ஆண்கள்: 83,49,645
பெண்கள்: 71,73,952
பிறா்: 1,261
மொத்த வேட்பாளா்கள்: 699