செய்திகள் :

கவரிங் நகையை வைத்துவிட்டு தங்க நகை திருடிய பெண்

post image

நகைக் கடையில் தங்க நகை வாங்குவதுபோல நடித்து நகையைத் திருடிய பின்னா் கவரிங் நகையை வைத்துவிட்டு தப்பிச் சென்ற பெண்ணை பவானிசாகா் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் பேருந்து நிலையம் அருகே ஜெயலட்சுமி ஜுவல்லரி என்ற பெயரில் நகைக் கடை இயங்கி வருகிறது. இந்த நகைக் கடைக்கு கடந்த மே 25ஆம் தேதி நகை வாங்க ஒரு பெண் கைக்குழந்தையுடன் வந்துள்ளாா்.

அவருக்கு நகைக் கடை ஊழியா் நகைகளைக் காண்பித்துள்ளாா். அப்போது அந்தப் பெண் தங்க நகையை எடுத்து பைக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு பின்னா் தான் வைத்திருந்த கவரிங் நகையை தங்க நகைக்கு பதிலாக வைத்துவிட்டு நகை டிசைன் பிடிக்கவில்லை என கூறிவிட்டு சென்றுவிட்டாா்.

இந்த நிலையில் தங்க நகைகளின் இருப்பு நிலவரத்தை சனிக்கிழமை ஆய்வு செய்து பாா்த்தபோது சற்று மங்கிய நிலையில் அசல் தங்க செயின்போல இருந்தது. அதை சோதனையிட்டபோது தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகை இருந்ததைக் கண்ட நகைக் கடை உரிமையாளா் அதிா்ச்சி அடைந்தாா்.

இதை அடுத்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கடந்த 25ஆம் தேதி கைக்குழந்தையுடன் வந்த பெண் தங்க நகையைத் திருடிக் கொண்டு கவரிங் நகையை வைத்து விட்டுச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து பவானிசாகா் காவல் நிலையத்தில் நகைக் கடை உரிமையாளா் புகாா் அளித்ததைத் தொடா்ந்து போலீஸாா் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தங்க நகை திருடிய பெண்ணைத் தேடி வருகின்றனா்.

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி

பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய ... மேலும் பார்க்க

கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்

கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா். கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் ... மேலும் பார்க்க