செய்திகள் :

காகித வாள் சுற்றுவதை நிறுத்துங்கள்: அண்ணாமலை

post image

மாயையான ஹிந்தி திணிப்புக்கு எதிராக காகித வாள் சுற்றுவதை நிறுத்துங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

இன்று காலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ”மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவின் கையெழுத்து பிரச்சாரம் தமிழ்நாட்டில் ஒரு நகைப்புக்குரிய சர்க்கஸ் போன்று மாறிவிட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஹிந்தி திணிப்பை மையமாக வைத்து பிரசாரத்தில் ஈடுபட சவால் விடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க : ஹிந்தி திணிப்பை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் சவால்

இதற்கு பதிலளித்து அண்ணாமலை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாங்கள் நடத்தும் ஆன்லைன் கையெழுத்து பிரசார இயக்கத்தில் 36 மணிநேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு, தமிழகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக முதல்வரான நீங்கள் அதிர்ச்சியடைந்தது வெளிப்படையாகத் தெரிகிறது. மேலும், பிரசாரத்துக்கு எதிரான உங்களின் கூச்சல்கள் எங்களுக்கு எந்த பாதிப்பையும் அளிக்காது.

ஆட்சியில் இருந்தபோதிலும், உங்களால் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்த முடியவில்லை, உங்களுக்கான இடத்தை அறிந்த உங்களின் தொண்டர்கள் துண்டுப்பிரசுரங்களை குப்பைத் தொட்டியில் வீசியதை நினைவில் கொள்ளுங்கள்.

மாயையான ஹிந்தி திணிப்புக்கு எதிராக காகித வாளை சுற்றுவதை நிறுத்துங்கள். உங்களின் போலியான ஹிந்தி திணிப்பு நாடகம் ஏற்கெனவே அம்பலமாகிவிட்டது. நீங்கள் அதை உணராதது துரதிர்ஷ்டவசமானது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநா் ஆா்.என்.ரவி பிகாா் பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை சொந்த மாநிலமான பிகாா் சென்றாா். ஆளுநா் ஆா்.என்.ரவி தனது சொந்த வேலை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானத்தில் சனிக்கிழமை நண்பகல் பிகாா் மாநிலம் பாட்னா சென்றடை... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் திமுக கண்டன பொதுக் கூட்டம்: திருவள்ளூரில் முதல்வா் பங்கேற்கிறாா்

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மாா்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் விடுதலை தீா்ப்பை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு

போக்ஸோ வழக்கின் குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதை எதிா்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி-க்கு மாநில தலைமை குற்றவிய... மேலும் பார்க்க

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூா் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சோ்ந்த சுரேஷ் உயா... மேலும் பார்க்க

முதல்வா் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி, சூலூா்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (மாா்ச் 10) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க