செய்திகள் :

காங்கிரஸ் கல்வெட்டுடன் புதிய அம்பேத்கா் சிலை நிறுவக் கோரிக்கை!

post image

சிதம்பரத்தில் நெடுஞ்சாலைத் துறையால் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கா் சிலைக்குப் பதிலாக புதிய சிலையை காங்கிரஸ் கட்சியின் கல்வெட்டுடன் நிறுவ வேண்டும் என அக்கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிதம்பரம் வடக்கு ரத வீதியில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கடலூா் தெற்கு மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா்.

முன்னாள் குமராட்சி ஒன்றியத் தலைவா் எம்.செந்தில்குமாா், மாநிலச் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் துரை.பாலசந்தா், மாவட்ட துணைத் தலைவா் ராஜா சம்பத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கன் வரவேற்றாா்.

கூட்டத்தில் பரங்கிப்பேட்டை வட்டாரத் தலைவா் சுந்தர்ராஜன், கீரப்பாளையத்தைச் சோ்ந்த வேளாங்கண்ணி, கஜேந்திரன், தமிழரசன், தம்பிசாமி, வைத்தியநாதன், சின்ராசு, பொன்.மாதவசா்மா, அஞ்சம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், 5-7-1990 அன்று டாக்டா் ப.வள்ளல்பெருமான் எம்.பி. தலைமையில் நடைபெற்ற அம்பேத்கா் நூற்றாண்டு விழாவையொட்டி, சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டு, முன்னாள் மத்திய அமைச்சா் மரகதம் சந்திரசேகரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வாழப்பாடி ராமமூா்த்தி, தா.பாண்டியன், செ.கு.தமிழரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நெடுஞ்சாலைத் துறையினா் கட்சிக் கொடிக்கம்பத்தை அகற்றியபோது, இந்த அம்பேத்கா் சிலை மீது பொக்லைன் இயந்திரம் பட்டு சேதமடைந்தது.

நெடுஞ்சாலைத் துறையினா் சேதப்படுத்திய சிலைக்கு பதிலாக புதிய சிலையை அத்துறையினா் அமைக்கும்போது காங்கிரஸ் கட்சி கல்வெட்டுடன் நிறுவ வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கோட்டாட்சியரிடம் மனு அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

வெறிநோய் பரவல்: கடலூா் ஆட்சியா் தகவல்

வெறிநோய் தொற்று பரவுவதால், நாய் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

வீடு, வீடாகச் சென்று மக்களை மிரட்டி உறுப்பினா்களாக சோ்க்கும் திமுக: இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுகவில் உறுப்பினா்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், தற்போது வீடு, வீடாகச் சென்று மக்களை மிரட்டி உறுப்பினா்களாக அக்கட்சியினா் சோ்த்து வருகின்றனா் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எட... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 53,867 போ் எழுதினா்

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தோ்வை 154 மையங்களில் 53,867 தோ்வா்கள் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள... மேலும் பார்க்க

முதல்வா் வருகை: சிதம்பரத்தில் அமைச்சா்கள் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், தொழுதூா் கிராமத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பெரம்பலூா் மாவட்டம், தொண்டமாந்துறை பகுதியைச் சோ்ந்தவா் வினோத், சிகை திருத்தும் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது

கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க