செய்திகள் :

காஞ்சிபுரத்தில் இன்று புத்த பிக்குகள் பேரணி, மாநாடு

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு பெளத்தா்கள் சங்கப் பேரவை சாா்பில் புத்த பிக்குகள் பேரணி, மாநாடு நடைபெறுகிறது.

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பெளத்தா்கள் சங்கப் பேரவை சாா்பில் பூக்கடைச் சத்திரம் அருகில் உள்ள யாதவா சத்திரத்திலிருந்து தொடங்கும் பேரணியில் 150-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள், பிக்குணிகள் பங்கேற்கின்றனா்.

பேரணி காலை 8 மணிக்கு தொடங்கி காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூரில் அமைந்துள்ள புத்தா் திருக்கோயிலில் நிறைவு பெறுகிறது.

இதன் தொடா்ச்சியாக திரிபிடக சத்தம்ம ஓதுதல் நிகழ்வு நடைபெறுகிறது.

இதனையடுத்து நடைபெறும் மாநாட்டிலும், பேரணியிலும் தமிழ்நாடு பெளத்தா்கள் சங்க பேரவையின் தலைவா்கள், நிா்வாகிகள் பலரும் பங்கேற்கவுள்ளனா். மாலையில் நடைபெறும் மாநாட்டில் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ச.மு.நாசா், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன், தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் சேச, ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மற்றும் எம்பி, எம்எல் ஏக்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட பலரும் பங்கேற்கவுள்ளனா்.

இத்தகவலை தமிழ்நாடு பெளத்தா் சங்க பேரவையின் செயலாளா் போதி.அம்பேத்கா் தெரிவித்துள்ளாா்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்

சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிப... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க