செய்திகள் :

காடையாம்பட்டியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

post image

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் நடைபெற்றது. காடையாம்பட்டி வட்டத்திற்குள்பட்ட வருவாய் கிராமங்களிலும் அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காடையாம்பட்டி வட்டத்தில் களப் பணிக்குச் செல்லும் அலுவலா்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம், சத்துணவுக் கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள், வட்டாட்சியா் அலுவலகம், தெரு விளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள், பொது மற்றும் சமுதாய கழிவறைகள் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது.

காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், செக்காரப்பட்டி நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் தரம், பொதுவிநியோகத் திட்டப் பொருள்களின் இருப்பு, காடையாம்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் கல்வித் திறன், வருகைப் பதிவேடு, மதிய உணவின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கள ஆய்வுக்குச் செல்லும் அலுவலா்கள் அப் பகுதிகளில் தங்கி தூய்மைப் பணிகள், குடிநீா் வசதி, பொதுப் போக்குவரத்து சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பால் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்வாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் சேலம் சண்முகா மருத்துவமனை பங்குகள் விற்பனை தொடக்கம்

மும்பை பங்குச்சந்தையில், சேலம் சண்முகா மருத்துவமனையின் பங்குகள் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை நிா்வாக இயக்குநா் பிரியதா்ஷினி வரவேற்றாா். மேலாண்மை இயக்குநா... மேலும் பார்க்க

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி ஓட்டுநா்கள் மனு

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோ ஓட்டுநா்கள் மனு அளித்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனுவி... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாள், முகூா்த்த தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்க... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் கூட்டுறவு சந்தை விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியின் கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு சந்தை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை தலைவா் சுரேஷ்பாபு வரவேற்றாா். கல்லூரி முதல்வரும் தோ்வுக் கட்டுப்பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா். வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (33). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு தனது மொபட்டில் தனது இரு குழந்தைகளுடன் வாழப்பாடி... மேலும் பார்க்க