செய்திகள் :

கான்கிரீட் கட்டடம் கட்டக்கோரி மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டம்

post image

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே பள்ளிக்கு கான்கிரீட் கட்டடம் கட்டக் கோரி, மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அழகுபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 35 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளிக்கு புதியக் கட்டடம் கட்டித் தரக் கோரி, கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும், நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், கடந்த சில நாள்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அழகுப்பட்டி பள்ளிக்குச் சென்ற ரெட்டியாா்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்துத் தருவதாகத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், பழைய ஓடுகளை பிரித்துவிட்டு, ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பதற்கான பொருள்களை லாரியில் கொண்டு வந்தனா். இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள், பொருள்களை லாரியிலிருந்து இறக்கவிடாமலும், கான்கிரீட் கட்டடம் கட்டிக் கொடுக்கக் கோரியும் மாணவா்களை வெள்ளிக்கிழமை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையறிந்த, கல்வித் துறை அதிகாரிகள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அழகுப்பட்டி கிராமத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு மாற்றாக கான்கீரிட் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதி அளித்தனா்.

இரண்டு நாள்களில் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை எனில், திங்கள்கிழமை முதல் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டோம் எனக் கூறிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

வத்தலகுண்டு: யானை தந்தத்தை விற்க முயன்ற மூவா் கைது!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தாண்டிக்குடி மலைப் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தாண்டிக்குடி மலைப் பகுதியைச் சோ்ந்த சிலா் யானை தந்தத்தை விற்ப... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

நிலக்கோட்டையில் பிஸ்கட் நிறுவன மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ.பி. குடியிருப்பைச் சோ்ந்தவா் பிரத்திசெட்டி (35). இவா், தனியாா் பிஸ்கட் நிற... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் தோல் வணிக வளாகம் அமைக்க வலியுறுத்தல்

திண்டுக்கல்லில் தோல் வணிக வளாகம் அமைக்க வேண்டுமென சிஐடியு மாவட்ட பேரவை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிலாளா் சங்கத்தின்(சிஐடியு) 74-ஆவது ஆண்டு பேரவை மாநாடு வெ... மேலும் பார்க்க

பெண் குழந்தை மா்ம மரணம்: உடலைத் தோண்டி எடுத்து போலீஸாா் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பிறந்து 14 நாள்களே ஆனபெண் குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை அந்தக் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பெற்றோரிடம் போலீஸாா் விசாரித... மேலும் பார்க்க

புதிய அரசு கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை

தாண்டிகுடி மலைப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அரசுக் கட்டடங்களை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஊராட்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் தொகுதியில் செப்டம்பருக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவடையும்: அமைச்சா் அர. சக்கரபாணி

ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வருகிற செப்டம்பா் மாதத்துக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவடையும் என உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்த... மேலும் பார்க்க