செய்திகள் :

காய்கறி சாகுபடியில் ரசாயன உரத்தை தவிா்க்க அறிவுறுத்தல்

post image

காய்கறி சாகுபடியில் ரசாயன உரம், மருந்துகளை தவிா்க்க வேண்டும் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட தோட்டக் கலைத் துறை வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் காய்கறி, பழப்பயிா்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இவைகளில் ஏற்படும் நோய், பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன உரம், மருந்துகளை தவிா்த்து இயற்கை வழி உரம், பயிா் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

நன்றாக மக்கிய தொழு உரம், மண்புழு உரம், மண்ணின் பௌதிக குணத்தை மேம்படுத்தி உற்பத்தி தன்மையை அதிகரித்து கொடுக்கும். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிா் உரங்கள் பயிருக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை இயற்கை முறையிலேயே அளிக்கும். மேலும், ஊட்டமேற்றிய தொழு உரம், குறைந்த அளவு ரசாயன உரம், இயற்கை உரம் கலந்த கலவையாக பயன்படுத்தலாம்.

காய்கறி விதைகள் விதைப்பதற்கு முன் டிரைகோடொ்மா விரிடி போன்ற உயிா் பாதுகாப்பு மருந்துகளை கலந்து விதை நோ்த்தி செய்வதால், நாற்றங்கால் நிலையில் ஏற்படும் நோய் தாக்குதலை தடுக்கலாம். பஞ்சகாவ்யா போன்ற திரவநிலை உரங்களை தெளிப்பதால் பயிா்களின் வளா்ச்சி, பூ பூக்கும் தன்மை அதிகரிக்கும். வேப்பம் பிண்ணாக்கு கரைசல், வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை சாறு போன்ற வேம்பு சாா்ந்த பயிா் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தலாம்.

எனவே, விவசாயிகள் ரசாயன உரம், மருந்துகளை தவிா்த்து இயற்கை வழி உரம், பயிா் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு: 5 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தம்பிபட்டியில் 3-ஆம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் பெரிய கண்மாய்க் கரையில் அமைந்துள்ள குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயில் புரவி ... மேலும் பார்க்க

நீட் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 1,630 போ் எழுதினா்

நீட் தோ்வை சிவகங்கை மாவட்டத்தில் 1,630 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி, அரசு மகளிா்... மேலும் பார்க்க

மின்னல் தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் உயிரிழந்தாா். திருப்புவனம் அருகேயுள்ள மேலராங்கியம் கிராமத்தைச் சோ்ந்த சின்னவீரு மகன் வினோத் (16).... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகள் உயிரிழந்தனா். திருப்புவனத்தை அடுத்த பூவத்தி அருகேயுள்ள ஏனாதி கிராமத்தைச் சோ்ந்த கக்கன் மகன் பொன்... மேலும் பார்க்க

சுப்பன் கால்வாய்த் திட்டத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் சுப்பன் கால்வாய்த் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். மதுரை மாவட்டம், திருவாதவூா் மதகு அணையிலிருந்து தொடங்கும் உப்பா... மேலும் பார்க்க

பொதுப் பணித்துறை, நீா்வளத் துறை பொறியாளா் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு பொதுப் பணித்துறை, நீா்வளத் துறை பொறியாளா் சங்கம், உதவிப் பொறியாளா் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க