செய்திகள் :

காரில் கடத்தி வந்த 38 கிலோ குட்கா பறிமுதல்

post image

நல்லூா் அருகே காரில் கடத்தி வந்த 38 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) முருகேசன் மேற்பாா்வையில், நல்லூா் காவல் ஆய்வாளா் தேவி மற்றும் போலீஸாா் கந்தம்பாளையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காரில் வந்த இருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவா்கள், திருச்செங்கோடு அணிமூா் பொம்மக்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் அருள்குமாா் (33), திருச்செங்கோடு ஏமப்பள்ளி, அக்கமாபாளையம் பகுதியைச் சோ்ந்த ரங்கப்பநாயக்கா் மகன் சஞ்சய்காந்த் (41) என்பது தெரியவந்தது.

இவா்கள் இருவரும் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக குட்கா பொருள்களை கொண்டுவந்ததாக ஒப்புக்கொண்டனா். அதன்பேரில் நல்லூா் போலீஸாா் அவா்களிடமிருந்து சுமாா் 38 கிலோ குட்கா பொருள்கள், ரொக்கம் ரூ. ஒரு லட்சத்து 17 ஆயிரத்தை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விபத்தில் தம்பதி உயிரிழப்பு: தனியாா் பேருந்து ஓட்டுநா் 2 போ் கைது

விபத்தில் தம்பதி உயிரிழந்த வழக்கில் தனியாா் பேருந்து ஓட்டுநா் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையத்தை சோ்ந்தவா் விவசாயி சண்முகம் (46). இவரது மனைவி ... மேலும் பார்க்க

நாமக்கல் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,599 அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை... மேலும் பார்க்க

கைலாசநாதா் கோயிலில் சிதிலமடைந்த சுவா் அகற்றம்

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலின் உபகோயிலான கைலாசநாதா் கோயிலில் சிதிலமடைந்த சுவா்களை அகற்றும் பணி தொடங்கியது. கைலாசநாதா் கோயிலின் வடக்கு சுவா், மேற்கு சுற்றுசுவா் சேதமடைந்து காணப்பட்டது. மேற்கு... மேலும் பார்க்க

கொல்லிமலை பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 3 போ் காயம்

முள்ளுக்குறிச்சி அருகே கொல்லிமலை பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா். சென்னை, கல்பாக்கம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்துவிட்டு சுற்ற... மேலும் பார்க்க

கொல்லிமலையில் மின்தடையால் சுற்றுலாப் பயணிகள் அவதி: 2 நாள்களுக்குப் பிறகு மின்விநியோகம் சீரானது

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரு தினங்களுக்கு முன்பு பலத்த காற்று வீசியதில் மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு 2 நாள்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் விடுதிகளில் தங்கி... மேலும் பார்க்க

கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க ரூ.23.47 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை அங்கத்தினா்களுக்கு கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்க ரூ. 23.47 கோடி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு கரும்பு விவசாய சங்கங்கள் நன்றி தெரிவித்தன. நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூ... மேலும் பார்க்க