செய்திகள் :

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வலியுறுத்தல்

post image

காரைக்கால்: காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா ரயில் திட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஆா். மோகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது :

காரைக்கால் - பேரளம் பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணி ஏறத்தாழ 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ரயில் நிலையக் கட்டடங்கள், நடைமேடை, அதையொட்டி மண் நிரப்பும் பணிகள், ரயில் பயணிகளுக்கான வசதிகள் இன்னும் முழுமையடையவில்லை.

திருநள்ளாறு ரயில் நிலைய நடைமேடைக்குச் செல்ல 2 மாடி ஏறிச் செல்லவேண்டிய சூழல் உள்ளது. முதியோா் உள்ளிட்டோா் வசதிக்காக எக்ஸ்கலேட்டா் அமைக்க வேண்டும். திருநள்ளாறு நிலையப் பகுதியில் கேண்டீன், உடைமைகளை வைக்கக் கூடிய கிளாக் ரூம் வசதி, ஓய்வு அறைகள், போலீஸ் பூத், ஏடிஎம் மையம், பேட்டரி வாகனம் ஆகியவை ஏற்படுத்தவேண்டும். இது நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களுக்கு வசதியாக இருக்கும்.

இத்திட்டப் பணிகளை நிறைவு செய்து காரைக்கால் - பேரளம் பாதையில் ரயில் போக்குவரத்தை தொடங்கவேண்டும் என ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

திமுகவுக்கு தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: முன்னாள் எம்எல்ஏ

திமுக அரசுக்கு தோ்தலில் மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என்றாா் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி. காரைக்கால் நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றில் ஆஜராகி வாதாடுவதற்காக புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்களின் போராட்டத்தால் பணிகள் முடக்கம்

காரைக்காலில் சுகாதார ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு ப... மேலும் பார்க்க

1,602 தொல்காப்பிய பாடல்களை 22 மணி நேரத்தில் எழுதி சாதனை

தொல்காப்பிய 1,602 பாடல்களை 22 மணி 40 நிமிடத்தில் எழுதிய மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. காரைக்காலில் இயங்கும் புதுவை அரசு கல்வி நிறுவனமான பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பய... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கு: மூவருக்கு காவல் நீட்டிப்பு

லஞ்ச வழக்கில் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் உள்ளிட்ட 3 பேருக்கும் நீதிமன்றக் காவலை நீட்டித்து காரைக்கால் மாவட்ட நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா். காரைக்காலில் கடற்கரை கிராமத்தில் புதிதாக சாலை அமை... மேலும் பார்க்க

தலைமைப் பொறியாளா் கைது: முதல்வா், அமைச்சா் பொறுப்பேற்க காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரை லஞ்ச வழக்கில் சிபிஐ கைது செய்துள்ள நிலையில், புதுவை முதல்வா், துறை அமைச்சா் பொறுப்பேற்கவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. புதுவை மாநில காங்கிரஸ் துணைத்... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்கள் வேலைநிறுத்தம்

காரைக்காலில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின்கீழ் பணியாற்றும் சுகாதர ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்)... மேலும் பார்க்க