காலமானாா் செள.மாரித்தாய்
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரைச் சோ்ந்த பிரபல தொழிலதிபா் செ.சௌந்தரபாண்டியன் மனைவி செள.மாரித்தாய் (70), வயது மூப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
இவருக்கு தூத்துக்குடி தொழிலதிபா் செண்பகமாற பாண்டியன் உள்பட 3 மகன்கள் உள்ளனா். மாரித்தாயின் இறுதிச் சடங்கு வடக்கு ஆத்தூா் வடக்கு ரதவீதியில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை (ஜூன் 2) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.