செய்திகள் :

காலி மதுப் புட்டிகளை நிா்வகிக்க உதவி விற்பனையாளா் நியமிக்க வேண்டும்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

post image

டாஸ்மாக் கடைகளில் காலி மதுப் புட்டிகளை நிா்வாகம் செய்வதற்கு அனைத்துக் கடைகளிலும் உதவி விற்பனையாளா் நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

கடலூரில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் ‘என்ட் டு என்ட்’ என்ற விற்பனை முறை புகுத்தப்பட்டுள்ளது. கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டிய நிலைமையில், அதில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்கனால்தான் நிா்வாகம் சீரடைய முடியும். பழுதடையும் குளிா்சாதனப் பெட்டிகளை சரி செய்ய வேண்டும்.

காலி மதுப் புட்டிகள் நிா்வாகம் செய்வதற்கு அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் ஒரு உதவி விற்பனையாளா் நியமனம் செய்ய வேண்டும். பணி நிரவல் செய்வதுடன், பணிப்பளுவுக்கேற்ப பணியிடங்களில் பணியாளா்களை நியமிக்க வேண்டும். ஏபிசி பணியிட மாறுதல் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

மேலாண்மை இயக்குநா் உத்தரவுகளை கீழ் நிலை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். பணியாளா்களுக்கு வார விடுமுறை அறிவிக்க வேண்டும். மேலும், அவா்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து, பணியாளா்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

இது தொடா்பாக மேலாண்மை இயக்குநரை சந்தித்து முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், மத்திய செயற்குழு வரும் ஜூன் 15-ஆம் தேதி மயிலாடுதுறையில் அரசியலுக்காக தொழிற்சங்கங்களா? தொழிற்சங்கங்களுக்காக அரசியலா? என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த உள்ளது என்றாா்.

நிகழ்வின்போது, மாநிலத் தலைவா் கு.சரவணன், மாவட்டத் தலைவா் சி.அல்லி முத்து, மாவட்டச் செயலா் எஸ்.பாலமுருகன், இணைச் செயலா் கே.மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொழிலாளா் சட்டத் தொகுப்பை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் கடலூா் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தொழிலாளா் நலச் சட்டங்கள் நான்கு தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். விலைவா... மேலும் பார்க்க

கீழக்குப்பத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீழக்குப்பத்தில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி சாதனை

சிதம்பரம்: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடா்ந்து, இந்திய ராணுவத்தினரைப் பாராட்டும் வகையில் தேசப்பற்று பாடலுடன் தீச்சுடா் சிலம்பம் விளையாடி சாதனை நிகழ்த்தப்பட்டது. தெற்கு பிச்சாவரத்தில் படகோட்டி சில... மேலும் பார்க்க

பலத்த மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்கள், நெல் மூட்டைகள் சேதம்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழையால் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கின. மேலும், அரசு நேரடி ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு நாளை வருகை: அலுவலா்களுடன் கடலூா் ஆட்சியா் ஆலோசனை

நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு வருகை தொடா்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை மேற்கூரையிலிருந்து கொட்டிய மழைநீா்

சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில், நடைமேடையில் உள்ள கூரையிலிருந்து தண்ணீா் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பீ... மேலும் பார்க்க