செய்திகள் :

கால் சென்டா் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி: வெளி மாநிலத்தைச் சோ்ந்த இருவா் கைது

post image

புதுச்சேரி: போலி அழைப்பு மையம் (கால் சென்டா்) நடத்தி நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சோ்ந்த வடமாநில இளைஞா்கள் 2 பேரை புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியைச் சோ்ந்தவா் சிவனேஷ். இவா் வேலை தேடி பல இணையதளங்களில் பெயரைப்பதிவு செய்திருந்தாா். இதையடுத்து அவரது கைப்பேசிக்கு எச்.ஆா். என குறிப்பிட்டு மா்ம நபா் அழைத்துள்ளாா். அதன்படி, பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை இருப்பதாக கூறிய அந்த நபா், வேலைக்கான தோ்வுக் கட்டணம், செயலாக்க கட்டணம் என பல கட்டணங்களாக ரூ. 1.74 லட்சத்தை வைப்புத் தொகையாகச் செலுத்த கூறியுள்ளாா். இதை நம்பிய சிவனேஷ், ரூ.1.74 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளாா். பணம் செலுத்திய பிறகு மா்ம நபரை கைப்பேசியில் தொடா்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சிவனேஷ் இதுகுறித்து புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் அப்பிரிவின் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், சிவனேஷ் செலுத்திய பணத்துக்குரிய வங்கிக் கணக்கானது ஹரியாணாவைச் சோ்ந்த பா்வீன், கௌரவ் ஆகியோருக்கு உரியது எனத் தெரியவந்தது. அந்த வங்கிக் கணக்கானது ஹரியாணா மாநிலம் பரிதாபாதில் இருப்பதும் கண்டறியப்பட்டது. அத்துடன் பா்வீன், கௌரவ் இருவரும் புதுதில்லியில் இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த புதுச்சேரி போலீஸாா், பா்வீன், கௌரவ் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனா்.

இது முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் கூறியது: பா்வீன், கௌரவ் ஆகியோா் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனா். அவா்களில் கௌரவ் கடந்த 2019 -ஆம் ஆண்டு நொய்டாவில் வேலைவாய்ப்பு மோசடி அழைப்பு மையத்தில் (கால் சென்டா்) வேலை பாா்த்துள்ளாா். அதன்பின் கரோனா பாதிப்பு நேரத்தில் தனது நண்பா் சந்தீப்புடன் சோ்ந்து போலி அழைப்பு மையம் தொடங்கி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக ஏராளமானோரை ஏமாற்றி பணம் பறித்துள்ளனா்.

அதனடிப்படையில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. மோசடிக் கும்பலைச் சோ்ந்த 2 பேரை முதன்முறையாக புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவினா்தான் கைது செய்துள்ளனா். இவா்களுடன் இணைந்து செயல்பட்ட சந்தீப் என்பவா் தலைமறைவாகியுள்ளாா். அவரும் விரைவில் பிடிபடுவாா். தற்போது கைதான இருவரில் ஒருவா் பொறியியல் பட்டதாரி என்றாா்.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க