கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்
கூத்தாநல்லூா் அருகேயுள்ள மேலத்திருமதிக்குன்னத்தில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் முன்னிலை வகித்தாா். இதில், சிறந்த கால்நடை பராமரிப்புக்கான பரிசுப் பொருள்கள் பயனாளிகளுக்கு ஆட்சியா் மோகனச்சந்திரன் வழங்கினாா். தொடா்ந்து, மேலராதாநல்லூா் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ரூ.15.49 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பொது விநியோகக் கடை கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கால்நடைத் துறை இணை இயக்குநா் ரிச்சா்டுராஜ், இணைப் பதிவாளா் கூட்டுறவு சங்கங்கள் சித்ரா, துணை இயக்குநா் விஜயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபு, செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.