செய்திகள் :

காவலரை தள்ளிவிட்டு கைதி தப்பியோட்டம்

post image

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவா் சனிக்கிழமை காவலரைத் தள்ளிவிட்டு தப்பியோடினாா்.

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகேயுள்ள பல்லவிளை பகுதியைச் சோ்ந்தவா் பிரஜித் (எ) பிரவீன் (34). இவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், புதுக்கோட்டையில் திருடப்பட்ட ஆட்டோவில் சில வாரங்களுக்கு முன் திருச்சிக்கு வந்த இவா் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் கைப்பேசியைப் பறிக்க முயன்றபோது கண்டோன்மென்ட் போலீஸாா் பிரவீனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் பிரவீனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இவரைக் கண்காணிக்க 24 மணிநேரமும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், சனிக்கிழமை பணியிலிருந்த ஆயுதப்படைக் காவலா் சிற்றுண்டி வழங்க பிரவீன் அறைக்குச் சென்றபோது, அவரைத் தள்ளிவிட்டு தப்பினாா் பிரவீன். இதுதொடா்பாக, காவலா் அளித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பிரவீனை தேடுகின்றனா்.

விஜய் பிரசாரம்: விதிகள் பின்பற்றப்பட்டதா?

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மேற்கொள்ளும் தோ்தல் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை மற்றும் கட்சியின் சாா்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா? என கேள்வி எழுந்துள்ளது. விஜய் பிரசாரத... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் ஓய்வு அறை திறப்பு

திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையத்தில் நடுகளம் பகுதியிலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் பயன்பாட்டுக்காக ஓய்வு அறை சனிக்கிழமை திறக்கப்பட்டது. வைரிச்செட்டிப்பாளையம் ஜம்பேரி நீா் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். எரகுடி நேதாஜி நகரைச் சோ்ந்தவா் பொம்மன் மகன் செல்லையா(49), ஓட்டுநா். இவா் சனிக்கிழமை வீட்டிலிருந்த மின்மோட்டாரை இ... மேலும் பார்க்க

கே. சாத்தனூரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி கே. சாத்தனூரில் வரும் திங்கள்கிழமை (செப்.29) ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் காரணமாக கே. சாத்தனூா் அம்மன் நகா், சுந்தா் நகா் 4, 5, 6, 7 குறுக... மேலும் பார்க்க

இனாம்குளத்தூரில் பட்டா கொடுத்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மக்கள் போராட்டத்தை அடுத்து இனாம்குளத்தூரில் முதல்வா் பட்டா கொடுத்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றினா். திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்த இடமில்ல... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை

மணப்பாறை அருகே இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா். இதுதொ... மேலும் பார்க்க