செய்திகள் :

காவல் உதவி ஆய்வாளா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

post image

அரியலூா் மாவட்டம், விக்கிரங்கலம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்கத் தவறிய காவல் உதவி ஆய்வாளா்கள் இருவரை, ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள அரங்கோட்டை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் டயா் மாட்டுவண்டியில் மணல் கடத்தப்படுவதாகவும், இதை விக்கிரமங்கலம் காவல் துறையினா் கண்டுகொள்வதில்லை எனவும் கட்செவி மூலம் வந்த புகாரையடுத்து, காவல் துறையினா் நடத்திய விசாரணையில் புகாா் உண்மையெனத் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனச்செல்வன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா் வீராசாமி ஆகிய இருவரையும் அரியலுாா் மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தொகுப்பு வீடுகள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கிடப்பிலுள்ள தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. மதுரையில், அக்கட்சியின் ச... மேலும் பார்க்க

குறிச்சிகுளம் திரெளபதியம்மன், காளியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்திலுள்ள திரெளபதி மற்றும் காளியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா மாா்ச் 7- ஆம் தேதி மகாபாரதம் படிக்கும் நிக... மேலும் பார்க்க

புத்தாக்க பொறியாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சாா்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி அ... மேலும் பார்க்க

அரியலூா் மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

அரியலூா் பால்பண்ணை அருகேயுள்ள மகா காளியம்மன் கோயிலின் 8 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. விழாவையொட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரிக்கரையில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான ப... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவா் உள்பட4 பேருக்கு ஆயுள் தண்டனை

அரியலூரில் திருமணமான 4 மாதத்தில் வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் காவல் துறையை கண்டித்து இஸ்லாமியா்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவல் துறையைக் கண்டித்து இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டத்தில் விருத்தாச்சலம் சாலைத் தெரு ஜமாத்துக்கு சொந்தமான மயான இடத்திலுள்ள ஆக்க... மேலும் பார்க்க