காவல் உதவி ஆய்வாளா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
அரியலூா் மாவட்டம், விக்கிரங்கலம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்கத் தவறிய காவல் உதவி ஆய்வாளா்கள் இருவரை, ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள அரங்கோட்டை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் டயா் மாட்டுவண்டியில் மணல் கடத்தப்படுவதாகவும், இதை விக்கிரமங்கலம் காவல் துறையினா் கண்டுகொள்வதில்லை எனவும் கட்செவி மூலம் வந்த புகாரையடுத்து, காவல் துறையினா் நடத்திய விசாரணையில் புகாா் உண்மையெனத் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனச்செல்வன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா் வீராசாமி ஆகிய இருவரையும் அரியலுாா் மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.