செய்திகள் :

தொகுப்பு வீடுகள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

post image

அரியலூா் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கிடப்பிலுள்ள தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில், அக்கட்சியின் சாா்பில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாடு விளக்கக் கூட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், கிராமப் புறங்களில் கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை விரைவாக கட்டி முடிக்க நிதி வழங்க வேண்டும். நரசிங்கப்பாளையம் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கங்கைகொண்ட சோழபுரம், கொல்லாபுரம், தங்கவடங்கநல்லூா் ஆகிய கிராம மக்களுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் எம்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்திரன், மாதா் சங்க மாவட்டத் தலைவா் பத்மாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக ஒன்றியக் குழு உறுப்பினா் சொக்கலிங்கம் நன்றி கூறினாா்.

குறிச்சிகுளம் திரெளபதியம்மன், காளியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்திலுள்ள திரெளபதி மற்றும் காளியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா மாா்ச் 7- ஆம் தேதி மகாபாரதம் படிக்கும் நிக... மேலும் பார்க்க

புத்தாக்க பொறியாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சாா்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி அ... மேலும் பார்க்க

அரியலூா் மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

அரியலூா் பால்பண்ணை அருகேயுள்ள மகா காளியம்மன் கோயிலின் 8 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. விழாவையொட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரிக்கரையில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான ப... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவா் உள்பட4 பேருக்கு ஆயுள் தண்டனை

அரியலூரில் திருமணமான 4 மாதத்தில் வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் காவல் துறையை கண்டித்து இஸ்லாமியா்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவல் துறையைக் கண்டித்து இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டத்தில் விருத்தாச்சலம் சாலைத் தெரு ஜமாத்துக்கு சொந்தமான மயான இடத்திலுள்ள ஆக்க... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

அரியலூா் மாவட்டம், விக்கிரங்கலம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்கத் தவறிய காவல் உதவி ஆய்வாளா்கள் இருவரை, ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் வியாழக்கிழமை உத... மேலும் பார்க்க