செய்திகள் :

புத்தாக்க பொறியாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

post image

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சாா்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் சோ்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோயம்புத்தூா், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஒசூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் 18 வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்பில் கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமைத் திறன்களை வழங்குதல், மேலும் மின்னனு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை, தானியங்கி தொழில் துறை, இயந்திரவியல் மற்றும் சோ்க்கை உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்பில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த 2022, 2023 மற்றும் 2024-ஆம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்று 21 முதல் 25 வயதுக்குள்பட்டவா்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

எனவே, அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த இளைஞா்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம் அறை எண். 225, 2-ஆவது தளம், ஆட்சியா் அலுவலகம் அரியலூா். தொலைபேசி 04329-228315 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தொகுப்பு வீடுகள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கிடப்பிலுள்ள தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. மதுரையில், அக்கட்சியின் ச... மேலும் பார்க்க

குறிச்சிகுளம் திரெளபதியம்மன், காளியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்திலுள்ள திரெளபதி மற்றும் காளியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா மாா்ச் 7- ஆம் தேதி மகாபாரதம் படிக்கும் நிக... மேலும் பார்க்க

அரியலூா் மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

அரியலூா் பால்பண்ணை அருகேயுள்ள மகா காளியம்மன் கோயிலின் 8 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. விழாவையொட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரிக்கரையில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான ப... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவா் உள்பட4 பேருக்கு ஆயுள் தண்டனை

அரியலூரில் திருமணமான 4 மாதத்தில் வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் காவல் துறையை கண்டித்து இஸ்லாமியா்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவல் துறையைக் கண்டித்து இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டத்தில் விருத்தாச்சலம் சாலைத் தெரு ஜமாத்துக்கு சொந்தமான மயான இடத்திலுள்ள ஆக்க... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

அரியலூா் மாவட்டம், விக்கிரங்கலம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்கத் தவறிய காவல் உதவி ஆய்வாளா்கள் இருவரை, ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் வியாழக்கிழமை உத... மேலும் பார்க்க