செய்திகள் :

காவல்துறையின் சோதனை; பறிபோன 4 வயது சிறுமியின் உயிர்; காவலர்கள் பணியிடை நீக்கம்.. என்ன நடந்தது?

post image

கர்நாடக மாநிலம், மாண்டியாவின் மத்தூர் தாலுகாவில் இருக்கிறது கோரவனஹள்ளி. இந்தப் பகுதியைச் சேர்ந்த அசோக் - வாணிஷ்ரி தம்பதியினரின் மகள் ஹிருத்திக்ஷா (4). இவர் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும்போது நாய் ஒன்று கடித்திருக்கிறது. இதை அறிந்த பெற்றோர் சிறுமியை பைக்கின் முன்பகுதில் அமரவைத்து, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது போக்குவரத்துக் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

போக்குவரத்து விதிமீறல்
போக்குவரத்து விதிமீறல்

ஹெல்மெட் இல்லாமல் வேகமாகச் சென்ற அசோக்கை காவல்துறையினர் நிறுத்த முயன்று, பைக்கின் ஹேண்டிலை பிடித்து நிறுத்தியிருக்கின்றனர். இதனால் சமநிலையிழந்த அசோக்கும் அவரின் குடும்பத்தினரும் கீழே விழுந்தனர். இதில் ஹிருத்திக்‌ஷா காயமடைந்தார். உடனே அவரை ஆட்டோவில் மாண்டியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகக் தெரிவித்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து சிறுமி உயிரிழந்ததற்கு காவல்துறை அதிகாரிகள்தான் காரணம் என அசோக்கின் உறவினர்களும், அவரின் ஊர் மக்களும் சிறுமியின் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மூன்று உதவி துணை ஆய்வாளர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

காவல்துறை

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி, ``மாண்டியாவில் ஒரு குழந்தையின் மரணம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. போக்குவரத்து போலீசார் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை சோதனை செய்வதை நிறுத்த வேண்டும். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருந்தால், சிறுமியின் மரணத்தைத் தடுத்திருக்கலாம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

பல் சிகிச்சை எடுத்துகொண்ட 8 பேர் மரணம்... சர்ச்சையில் வாணியம்பாடி கிளினிக் - நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பி.ஜே.என்.நேரு சாலையில், `வி.டி.எஸ் - அறிவு பல் மருத்துவமனை’ என்கிற பெயரில், தனியார் கிளினிக் செயல்பட்டுவந்தது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திர... மேலும் பார்க்க

20 ஆண்டுகளில் பாலியல் கொடுமைக்கு இரையான 299 பேர்... பிரான்ஸை அதிரவைத்த ஓய்வுபெற்ற மருத்துவர்!

கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ராய... மேலும் பார்க்க

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: நிலத்தைக் கேட்டு பெண்ணிற்குக் கொலை மிரட்டல்; திமுக எம்எல்ஏ-வின் சகோதரர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., சண்முகையா. இவரது உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன்.தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர். முருகேசன் ஓட்டப்... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க