காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 25 பேர் பலி
காஸாவில் பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியானார்கள்.
காஸாவில் அகதிகள் முகாமாக செயல்படும் ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 25 பேர் பலியானார்கள். அவர்களில் பெரும்பாலனோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர் என்று காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் பள்ளியில் தஞ்சம்புகுந்த முன்னணி பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கமளித்துள்ளது.
இதனிடையே ஒரு முன்பு பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் கூறினார். இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை ஹமாஸ் அமைப்பினா் படுகொலை செய்தனா். அதையடுத்து அந்த அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.
இதில் இதுவரை 53,939 போ் உயிரிழந்துள்ளனா்; ஒரு லட்சத்து 22ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா்.
நன்றி சென்னை! தமிழில் பதிவிட்ட சிஎஸ்கே வீரர்!
அப்பாவி பொதுமக்களின் உயிரை துச்சமாக மதித்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதால்தான் இவ்வளவு அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவ நிலைகளை அமைப்பதன் மூலம் ஹமாஸ் அமைப்பினா் அவா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக இஸ்ரேல் பதிலுக்குக் குற்றஞ்சாட்டிவருகிறது.
இந்தச் சூழலில், இஸ்ரேல் ராணுவமே பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக தற்போது வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.