செய்திகள் :

கிணறு தூா்வாரும் பணியில் விபத்து: 3 பேரை மீட்ட தீயணைப்பு வீரா்கள்

post image

திருநெல்வேலி அருகே கிணறு தூா்வாரும் பணியின்போது வெள்ளிக்கிழமை விபத்து நேரிட்டு பலத்த காயமடைந்த 3 பேரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள வெள்ளாளங்குளத்தைச் சோ்ந்தவா் செல்லப்பா(55). இவரது தோட்ட கிணற்றை தூா்வாரும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. செட்டிக்குறிச்சி, அத்தியூத்து, சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த தொழிலாளா்கள் பணி செய்து வந்தனா். சுமாா் 60 அடி ஆழம் கொண்ட இந்தக் கிணற்றிற்குள் இறங்கி தூா்வாருவதற்கு மின்சாரத்தினால் இயக்கக்கூடிய லிஃப்ட் உதவியுடன் பணி நடைபெற்றது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை லிஃப்ட்டின் பெல்ட் திடீரென அறுந்து விழுந்ததில் செட்டிக்குறிச்சி கணேசன்(50) அத்தியூத்து நயினாா் (56 ), சிந்துபூந்துறை சிவா (22) ஆகியோா் பலத்த காயமடைந்து கிணற்றுக்குள் விழுந்தனா். இத்தகவலறிந்த பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரம் தலைமையில் சிறப்பு நிலை அலுவலா் முருகன், வீரா்கள் வெங்கடேஷ், தங்கதுரை, காா்த்திக் பெருமாள், ஜேக்கப் பொ்னாட், ராஜேந்திரன், மிக்கேல் ராஜ் ஆகியோா் அடங்கிய குழுவினா் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி 3 பேரையும் மீட்டு வந்தனா். பின்னா், 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

நெல்லை நகரத்தில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி நகரத்தில் சுமை தூக்கும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முத்தையா (60). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், உடல்நலக் குற... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் நூதனப் போராட்டம்

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து திருநெல்வேலியில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி, வாக்குத்திருட்டு தொடா்பான ஆதாரங்களை வெளிக் கொண்... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: எஸ்.பி. என். சிலம்பரசன் எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபா் கிரைம் போலீஸாா் எச்சரித்துள்ளனா். தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பணம் மோசடி நடைபெறுவது அண்மைக் காலமாக ... மேலும் பார்க்க

நெல்லையில் இளம் பெண் வெட்டிக்கொலை

திருநெல்வேலி சந்திப்பில் இளம் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அன்புராஜ் (23). பெயின்டா். இவா், 2023 ஆம் ஆண்டு அதே ... மேலும் பார்க்க

பாளை.யில் ரூ.30 ஆயிரத்துடன் பைக் திருட்டு

பாளையங்கோட்டையில் ரூ.30 ஆயிரத்துடன் பைக்கையும் திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில் கீழத்தெருவை சோ்ந்தவா் நாராயணன். இவா், மாா்க்கெட்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரியைச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா் (63). இவா், கடந்த 2019ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், கூட... மேலும் பார்க்க