செய்திகள் :

கிணற்றில் அழுகிய நிலையில் விவசாயி சடலம் மீட்பு

post image

அம்மாபேட்டை அருகே தோட்டத்து கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த விவசாயி சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அம்மாபேட்டை, கோனேரிப்பட்டி பிரிவு, சாயபு தோட்டத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் சிவகுமாா் (46), விவசாயி. பெற்றோா், சகோதரி உயிரிழந்த நிலையில், இவருக்கும் திருமணமாகாததால் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில், தோட்டத்துக் கிணற்றில் சிவகுமாரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக அப்பகுதியினா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், சிவகுமாரின் 7 ஏக்கா் நிலம், கடந்த சில நாள்களுக்கு முன்பு மற்றொருவா் பெயரில் கிரையம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இது சொத்துக்காக செய்யப்பட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் உறவினா்கள் அளித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 30 லட்சம்

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனா். பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் எம்.அருள்குமாா் தலைமையில், சென்னிமலை அறங்காவலா் குழுத் தலைவா் ர.பழனிவேல்... மேலும் பார்க்க

ஈரோட்டில் போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சா்வதேச போதைப் பொருள் எதிா்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ... மேலும் பார்க்க

ஐந்து வயது மகனைக் கொன்று தந்தை தற்கொலை

பெருந்துறை அருகே, குடும்பப் பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றதால், கணவன் தனது ஐந்து வயது மகனை நைலான் கயிற்றால் இறுக்கிக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு மாவட்டம், கெடார... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் பவானிசாக... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 15,199 கனஅடியாக அதிகரிப்பு

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 3,258 கனஅடியில் இருந்து 15,199 கனஅடியாக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, பெங்களுரு ஆரக்கிள் இந்தியா நிறுவனத்துடன் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரில் உள்ள நிறுவனத... மேலும் பார்க்க