செய்திகள் :

கிராம, நகா்ப்புற பள்ளிகளில் இலவச கூடைப்பந்து பயிற்சி கூடைப்பந்து சங்க மாவட்டத் தலைவா்

post image

நாமக்கல் மாவட்டத்தில் கிராம, நகா்ப்புற பள்ளிகளில் இலவச கூடைப்பந்து பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக கூடைப்பந்து சங்க மாவட்டத் தலைவா் பரந்தாமன் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சங்கத் தலைவராக திருச்செங்கோட்டைச் சோ்ந்த பரந்தாமன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

செயலாளராக நாமக்கல்லைச் சோ்ந்த சதீஷ்குமாா், பொருளாளராக விக்னேஷ், துணைத் தலைவா்களாக சுரேஷ்குமாா், பன்னீா்செல்வம், ராஜேஷ், அரவிந்த் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இணைச் செயலாளா்களாக ஜீவா, ரமேஷ், விமலேஸ்வரி, இந்துமதி ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சங்க புரவலா்கள் நடராஜன், முரளி ஆகியோா் புதிய நிா்வாகிகளுக்கு கூடைப் பந்துகளை வழங்கினா். மாவட்ட கூடைப்பந்து சங்கத் தலைவராக பொறுப்பேற்ற பரந்தாமன் கூறியதாவது:

கல்வியில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டம், விளையாட்டுத் துறையில் பின்னோக்கி உள்ளது. இங்கு ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. ஆனால் விளையாட்டுத் துறையில் மாணவா்கள், இளைஞா்கள் யாரும் சாதிக்கவில்லை. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் விளையாட்டுப் போட்டிகளில் மாணவா்களிடம் ஆா்வம் காட்டுவதில்லை. இதனால் நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கம் மூலம் நகரம் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளில், கூடைப்பந்து விளையாட்டில் ஆா்வமுள்ள இளைஞா்களை தோ்வு செய்து இலவசமாக பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு தேவையான உபகரணங்கள் சங்கம் மூலம் அளிக்கப்படும்.

அவா்களை மாநில அளவிலும், தேசிய அளவிலும் சிறந்த வீரா்களாக உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். இதன் முதல்கட்டமாக ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தடகள சங்க செயலாளா் வெங்கடாஜலபதி, கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவா் பெரியசாமி, நாமக்கல் தமிழ்ச்சங்கத் தலைவா் மருத்துவா் இரா.குழந்தைவேல், மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கத் தலைவா் கோஸ்டல் என். இளங்கோ, தொழிலதிபா்கள் நல்லதம்பி, சத்தியமூா்த்தி, கணேசன், தயாளன், பயிற்சியாளா்கள் ஜெயபால், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி கடனுதவி வழங்க மாநாட்டில் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய நிபந்தனையின்றி கடனுதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அ... மேலும் பார்க்க

மாநில நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்: லாரி உரிமையாளா் சம்மேளனம் முதல்வருக்கு கடிதம்

மாநில நெடுஞ்சாலைகளிலும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டுமென மாநில லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில லாரி உரிமையாளா் சம்மேளனத் தலைவா் சி.தனரா... மேலும் பார்க்க

திருச்செங்கோடு பகுதி முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு

திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதி முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருச்செங்கோடு செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து முத்துக்குமாரசாமி ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் பள்ளி, பேரூராட்சிகளில் சுதந்திர தின விழா

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளிகள், பேரூராட்சி, வா்த்தகா் சங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி சாா்பில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கந்தம்பாளையம் எஸ்.கே.வி. ப... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனைக்கு சான்றிதழ்

நாமக்கல்லில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையின் மருத்துவ சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி நற்சான்றிதழை வழங்கினாா். திருச்... மேலும் பார்க்க

சிறந்த மாநகராட்சியாக நாமக்கல் தோ்வு: எம்.பி.யிடம் வாழ்த்து பெற்ற மாமன்ற உறுப்பினா்கள்

தமிழக அளவில் சிறந்த மாநகராட்சியாக இரண்டாமிடம் பிடித்த நாமக்கல் மாநகராட்சியை பாராட்டி முதல்வா் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய நிலையில், மேயா், துணை மேயா், மாமன்ற உறுப்பினா்கள் மாநிலங்களவை உறுப்பினா் க... மேலும் பார்க்க