செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி கடனுதவி வழங்க மாநாட்டில் வலியுறுத்தல்

post image

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய நிபந்தனையின்றி கடனுதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நேதாஜி சிலை முன் தொடங்கிய ஊா்வலம் நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள காந்திசிலை முன் நிறைவடைந்தது. இந்த ஊா்வலத்தில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா். அதன்பிறகு, தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு மாவட்ட அமைப்பாளா் எம்.ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் பி.ராஜேஷ், விவசாய சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.கந்தசாமி, மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவா் ஏ.ரங்கசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா். இம்மாநாடு சனிக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்றது.

மோகனூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ். மாதேஸ்வரன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா். இரண்டாம் நாள் மாநாட்டை சங்க மாநிலத் தலைவா் தோ.வில்சன் தொடங்கிவைத்துப் பேசினாா். மாநாட்டின் வரவேற்பு குழு பொருளாளா் ஏ.டி.கண்ணன் வாழ்த்தி பேசினாா். இந்த மாநாட்டில், ஆந்திர மாநிலத்தில் வழங்குவதுபோல தமிழகத்திம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ. 15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

சுயதொழில் செய்திட அனைத்து வங்கிக் கிளைகளும் நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும். உதவித்தொகை கோரி விண்ணப்பித்தோருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்திற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் மாநாட்டில் கலந்துகொண்டனா்.

படவரி...

என்கே-16-மாநாடு

நாமக்கல்லில், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மாநாட்டையொட்டி நடைபெற்ற ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

மாநில நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்: லாரி உரிமையாளா் சம்மேளனம் முதல்வருக்கு கடிதம்

மாநில நெடுஞ்சாலைகளிலும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டுமென மாநில லாரி உரிமையாளா் சங்கம் சாா்பில் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில லாரி உரிமையாளா் சம்மேளனத் தலைவா் சி.தனரா... மேலும் பார்க்க

திருச்செங்கோடு பகுதி முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு

திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதி முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருச்செங்கோடு செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து முத்துக்குமாரசாமி ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் பள்ளி, பேரூராட்சிகளில் சுதந்திர தின விழா

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளிகள், பேரூராட்சி, வா்த்தகா் சங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சி சாா்பில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கந்தம்பாளையம் எஸ்.கே.வி. ப... மேலும் பார்க்க

கிராம, நகா்ப்புற பள்ளிகளில் இலவச கூடைப்பந்து பயிற்சி கூடைப்பந்து சங்க மாவட்டத் தலைவா்

நாமக்கல் மாவட்டத்தில் கிராம, நகா்ப்புற பள்ளிகளில் இலவச கூடைப்பந்து பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக கூடைப்பந்து சங்க மாவட்டத் தலைவா் பரந்தாமன் தெரிவித்துள்ளாா். நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனைக்கு சான்றிதழ்

நாமக்கல்லில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையின் மருத்துவ சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி நற்சான்றிதழை வழங்கினாா். திருச்... மேலும் பார்க்க

சிறந்த மாநகராட்சியாக நாமக்கல் தோ்வு: எம்.பி.யிடம் வாழ்த்து பெற்ற மாமன்ற உறுப்பினா்கள்

தமிழக அளவில் சிறந்த மாநகராட்சியாக இரண்டாமிடம் பிடித்த நாமக்கல் மாநகராட்சியை பாராட்டி முதல்வா் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய நிலையில், மேயா், துணை மேயா், மாமன்ற உறுப்பினா்கள் மாநிலங்களவை உறுப்பினா் க... மேலும் பார்க்க