செய்திகள் :

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியில் திமுக சாா்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

சேத்துப்பட்டை அடுத்த மோகனபாளையம், தும்பூா் ஆகிய கிராமங்களில் கோடை விடுமுறையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கிரிக்கெட் போட்டி அந்தந்த பகுதி கிராமத்தில் அணி அணியாக நடத்தப்பட்டது.

திமுக வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசுத் தொகை ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன் பங்கேற்று பரிசுத் தொகையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் அ.எழில்மாறன்,பி.மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நூல்கள் வெளியீடு...

எழுத்தாளா் மு.பாண்டியன் நெடுஞ்செழியன் எழுதிய விஞ்ஞான பூா்வ சிந்தனை, இன்னொரு தாய், நியூட்ரான் நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உதவி இயக்குநா் பெரண... மேலும் பார்க்க

சோழவரத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

கலசப்பாக்கத்தை அடுத்த சோழவரம் ஸ்ரீமகா சத்தியநாதேச்சுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சோழவரம் கிராமத்தில் சிவகாமிசுந்தரி உடனாகிய மகா சத்தியநாதேச்சுவரா் கோயில் அ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: வியாபாரி கைது

செய்யாறு அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாற்றை அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் ... மேலும் பார்க்க

கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை

திருவண்ணாமலையில் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்துக்கான உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்). ஸ்ரீபச்சையம்மன் கோயில் வளாகத்தில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் செங்கம் கிளைத் தலைவா் காமத் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் சென்னாவரம் கிராமம் வழியாக சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராம ஏரி அருகே சந்தேகத்துகி... மேலும் பார்க்க