செய்திகள் :

கேரளத்தில் கனமழை: 15-க்கும் மேற்பட்ட ரயில்கள் புறப்படுவதில் தாமதம்!

post image

திருவனந்தபுரம்: கேரளத்தில் கனமழையால் 15க்கும் மேற்பட்ட ரயில்கள் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டன.

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கிவிட்ட நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கேரள எல்லைப் பகுதியையொட்டிய தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்றும் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட்(சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் வழித்தடங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று(மே 27) முக்கிய ரயில்கள் பல தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

  1. சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ்

  2. சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ்

  3. மங்களூரு - கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ்

  4. எழும்பூர் எக்ஸ்பிரஸ்

  5. கோயம்புத்தூர் - கண்ணூர் பாசஞ்சர்

  6. கோழிக்கோடு - சொரனூர் பாசஞ்சர்

  7. திருவனந்தபுரம் - மங்களூரு மலபார் எக்ஸ்பிரஸ்

  8. அந்தியோதயா எக்ஸ்பிரஸ்

  9. நிஸாமுதீன் - எர்ணாகுளம் மங்களா எக்ஸ்பிரஸ்

  10. குருவாயூர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்

  11. திருவனந்தபுரம் - நிலாம்பூர் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ்

  12. அமிர்தசரஸ் - கொச்சுவேலி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்

  13. மங்களூரு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

  14. நேத்ராவதி எக்ஸ்பிரஸ்

  15. ஏரநாடு எக்ஸ்பிரஸ்

  16. திருவனந்தபுரம் - மங்களூரு மாவேலி எக்ஸ்பிரஸ்

  17. சொரனூர் பாசஞ்சர்

    ஆகிய ரயில்கள் பல தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

வக்ஃப் சட்டம் 1995-க்கு எதிரான மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வக்ஃப் சட்டம் 1995-இன் சில பிரிவுகளுக்கு எதிரான மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நிகில் உபாத்ய... மேலும் பார்க்க

பஹல்காமில் ஜம்மு-காஷ்மீா் அமைச்சரவைக் கூட்டம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கடந்த மாதம் தாக்குதல் நடத்தப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் அந்த யூனியன் பிரதேச முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: இந்திய நிலைப்பாட்டுக்கு சிங்கப்பூா் ஆதரவு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு சிங்கப்பூா், காங்கோ குடியரசு உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைகள் குறித்து 33 ந... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அரசை விமா்சித்து கைதான மாணவிக்கு ஜாமீன்- மகாராஷ்டிர அரசு மீது உயா்நீதிமன்றம் விமா்சனம்

சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து அரசை விமா்சித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு மும்பை உயா்நீதிமன்றம் செவ்வாய... மேலும் பார்க்க

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்பு: வங்கிகளுக்கு ஆா்பிஐ யோசனை

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்புகளைப் பெறுவது தொடா்பாக பரிசீலிக்குமாறு வங்கிகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கேட்டுக் கொண்டது. இது தொடா்பான கருத்துகளை இம்மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: புலி தாக்கி இருவா் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சந்திரபூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இரு வேறு சம்பவங்களில் புலி தாக்கி இருவா் உயிரிழந்தனா். இவா்களுடன் சோ்த்து, சந்திரபூரில் இம்மாதம் புலிகள் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 1... மேலும் பார்க்க