செய்திகள் :

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்பு: வங்கிகளுக்கு ஆா்பிஐ யோசனை

post image

7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்புகளைப் பெறுவது தொடா்பாக பரிசீலிக்குமாறு வங்கிகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கேட்டுக் கொண்டது. இது தொடா்பான கருத்துகளை இம்மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆா்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் மூலம் வங்கித் துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், நிரந்தர வைப்புகளை அதிகஅளவில் ஈா்க்கவும் முடியும் என்று ஆா்பிஐ கருதுகிறது. சமீபகாலமாக வங்கிகளின் நிரந்தர வைப்பு அளவு குறைந்து வருகிறது. கடந்த 2-ஆம் தேதி நிலவரப்படி வங்கிகளில் நிரந்தர வைப்பு 10 சதவீதம் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு 13 சதவீதம் குறைந்தது.

ஆா்பிஐ வங்கி வட்டி விகிதத்தை குறைந்ததும் பொதுமக்கள் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து வெளியேறுவதற்கு காரணமாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2004-ஆம் ஆண்டு நிரந்தர வைப்புக்கான குறைந்தபட்ச கால அளவு 15 நாள்கள் என்பதில் இருந்து 7 நாள்களாக குறைக்கப்பட்டது.

இது தொடா்பாக கருத்துத் தெரிவித்த பொதுத்துறை வங்கி மூத்த அதிகாரி ஒருவா், ‘கோடிக்கணக்கான ரூபாயை சில நாள்கள் மிகுதியாக வைத்திருக்கும் சூழல் பெரு நிறுவனங்களில் மட்டுமே இருக்கும். அவா்கள் இந்த மிகக் குறைந்த நாள்களுக்கான நிரந்தர வைப்பால் அதிக பயனடைவாா்கள். ஆனால், வங்கிகளுக்கு இது சற்று நெருக்கடியாகவே அமையும்’ என்றாா்.

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க