செய்திகள் :

இபிஎஸ்ஸுக்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை: மு.க. ஸ்டாலின்

post image

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது தொகுதியான சென்னை கொளத்தூரில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கிவைத்தார்.

கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 22.61 கோடி மதிப்பீட்டில் முதியோர் சிறப்பு இல்லத்தை திறந்து வைத்த அவர், மூத்த குடிமக்களுக்கான 3 உறைவிடங்கள் கட்டுமானப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். பொதுத் தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.

இதன்பின்னர் கொளத்தூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"திமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்.

இபிஎஸ்ஸுக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை. அவருக்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.

நான் தில்லிக்கு வெள்ளைக் கொடியும் கொண்டு செல்லவில்லை, காவிக் கொடியும் கொண்டு செல்லவில்லை என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன்.

கொள்ளையடித்த கட்சியான அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம், தூத்துக்குடி என ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி வீம்புக்கென செய்துகொண்டிருக்கிறார்" என்று பேசியுள்ளார்.

இதையும் படிக்க | திமுக ஆட்சி முடியும் வரை மக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்: இபிஎஸ்

தமிழகத்தில் பரவுவது ஒமைக்ரான் தொற்று: பொது சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

தமிழகத்தில் பரவி வருவது ஒமைக்ரான் வகை கரோனா தொற்று என்றும், இது அச்சப்படும் பாதிப்பு இல்லை என்றபோதிலும் பொது மக்கள் உரிய விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்: தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைகிறது

வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து மே 30-இல் திமுக ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து வரும் 30-இல் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து, திமுக விவசாய அணிச் செயலா் ஏ.கே.எஸ்.விஜயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்திய ரிசா்வ் வங்... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் விவகாரம்: சிபிஐ விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்

நெல் கொள்முதல் மோசடி தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளிடம் இருந்து மொத்தம் ரூ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணின் 28 வார கருவை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 80 சதவீத மாற்றுத்திறனாளி பெண்ணின் 28 வார கருவை மருத்துவ ஆய்வுக்குப் பின் அகற்ற அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

அரசு கலை - அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் மே 30-இல் வெளியீடு

தமிழகத்தில் அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை விண்ணப்பதிவு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், 2 லட்சத்து 25 ஆயிரத்து 705 போ் விண்ணப்பித்துள்ளனா். பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்ட... மேலும் பார்க்க