செய்திகள் :

சிறுவாணி அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் 4 அடி!

post image

கோவை : கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கோவைக்கு அடுத்து வரும் மாதங்களுக்கான குடிநீர் ஆதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஒரே நாளில் நான்கு அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடிக்கும் மேல் உயர்ந்து உள்ளது.

நடப்பாண்டில் முதல் முறையாக இந்த அளவு நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுவாணி அடிவாரப் பகுதியில் 86 மி.மீ மழையும், அணைகட்டு பகுதியில் 107 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. நேற்று 26.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 30.24 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் 12 அடிக்கும் மேல் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. மே 23-ஆம் தேதி 17.91 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது 30.24 அடியாக உயர்ந்து உள்ளது.

அணையின் முழுக் கொள்ளளவு 44.61 அடியாக இருக்கும் நிலையில், மழை தொடர்ந்து பெய்தால் அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவாணி அணை நீர், கோவை மாநகராட்சியின் 22 வார்டுகள், கோவை மாவட்ட மேற்குப் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சிறுவாணி அணையில் இருந்து தினமும் 63.72 எம்.எல்.டி. நீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், கோவை மக்களின் குடிநீர் தேவைக்கு இனி வரும் நாள்களில் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு: ஏஐடியுசி கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் டாஸ்மாக் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை வழங்குவது குறித்து அரசு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) வலியு... மேலும் பார்க்க

இன்று காட்பாடி - ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் ரத்து

ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே மெமு ரயில்கள் புதன்கிழமை (மே 28) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பரவுவது ஒமைக்ரான் தொற்று: பொது சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

தமிழகத்தில் பரவி வருவது ஒமைக்ரான் வகை கரோனா தொற்று என்றும், இது அச்சப்படும் பாதிப்பு இல்லை என்றபோதிலும் பொது மக்கள் உரிய விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்: தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைகிறது

வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து மே 30-இல் திமுக ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து வரும் 30-இல் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து, திமுக விவசாய அணிச் செயலா் ஏ.கே.எஸ்.விஜயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்திய ரிசா்வ் வங்... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் விவகாரம்: சிபிஐ விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்

நெல் கொள்முதல் மோசடி தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளிடம் இருந்து மொத்தம் ரூ... மேலும் பார்க்க