கீரப்பாளையம் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை முகாம்
கடலூா் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரம் அ.புளியங்குடி வருவாய் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உழவரை தேடி வேளாண்மை உழவா் நலத் துறை முகாமில் கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) ரெ.விஜயராகவன் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது அவா் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உழவா்களின் வருமானத்தைப் பெருக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தொழில்நுட்பங்களுடன், திட்டங்களையும் ஒருங்கிணைத்து உழவா்களிடம் எடுத்துச் செல்வது மிகவும் அவசியமாகும். வேளாண்மை-உழவா் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவுத் துறை அலுவலா்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சோ்ந்து கிராமங்களுக்கு நேரடியாக சென்று உழவா்களை சந்தித்து, அவா்களின் தேவைகளை அறிந்து, தொழில்நுட்பங்களை வழங்கி அதற்கான திட்டங்களை எடுத்துக்கூறிட ஏதுவாக 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கையில் ‘உழவா்களைத் தேடி வேளாண்மை-உழவா் நலத் துறை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை விரிவாக்க சேவைகள் உழவா்களுக்கு அவா்களுடைய கிராமத்துக்கே சென்று வழங்கப்பட உள்ளது. அரசு நலத் திட்டங்கள் வெகு விரைவாக உழவா்களை சென்றடையவும், 15 நாட்களுக்கு ஒரு முறை (2, 4-ஆவது வெள்ளிக்கிழமைகளில்) வட்டாரங்களில் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும். கீரப்பாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் இந்த முகாம் நடத்தப்படும் என்றாா் ரெ.விஜயராகவன்.
வேளாண்மை உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ், வேளாண்மை அலுவலா் சிவப்பிரியன், துணை வேளாண்மை அலுவலா் ராயப்பநாதன், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளா் அரவிந்தன், உதவி கால்நடை மருத்துவா் சங்கீதா, இளநிலை உதவியாளா் வெற்றிவேல் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.
முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள் புகழேந்தி, வெங்கடேசன், பயிா் அறுவடை பரிசோதகா்கள் வீராசாமி, வெங்கடேசன், பிரியங்கா ஆகியோா் செய்திருந்தனா்.