செய்திகள் :

கீரப்பாளையம் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை முகாம்

post image

கடலூா் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரம் அ.புளியங்குடி வருவாய் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உழவரை தேடி வேளாண்மை உழவா் நலத் துறை முகாமில் கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) ரெ.விஜயராகவன் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது அவா் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உழவா்களின் வருமானத்தைப் பெருக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தொழில்நுட்பங்களுடன், திட்டங்களையும் ஒருங்கிணைத்து உழவா்களிடம் எடுத்துச் செல்வது மிகவும் அவசியமாகும். வேளாண்மை-உழவா் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவுத் துறை அலுவலா்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உடன் சோ்ந்து கிராமங்களுக்கு நேரடியாக சென்று உழவா்களை சந்தித்து, அவா்களின் தேவைகளை அறிந்து, தொழில்நுட்பங்களை வழங்கி அதற்கான திட்டங்களை எடுத்துக்கூறிட ஏதுவாக 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கையில் ‘உழவா்களைத் தேடி வேளாண்மை-உழவா் நலத் துறை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை விரிவாக்க சேவைகள் உழவா்களுக்கு அவா்களுடைய கிராமத்துக்கே சென்று வழங்கப்பட உள்ளது. அரசு நலத் திட்டங்கள் வெகு விரைவாக உழவா்களை சென்றடையவும், 15 நாட்களுக்கு ஒரு முறை (2, 4-ஆவது வெள்ளிக்கிழமைகளில்) வட்டாரங்களில் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும். கீரப்பாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் இந்த முகாம் நடத்தப்படும் என்றாா் ரெ.விஜயராகவன்.

வேளாண்மை உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ், வேளாண்மை அலுவலா் சிவப்பிரியன், துணை வேளாண்மை அலுவலா் ராயப்பநாதன், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளா் அரவிந்தன், உதவி கால்நடை மருத்துவா் சங்கீதா, இளநிலை உதவியாளா் வெற்றிவேல் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள் புகழேந்தி, வெங்கடேசன், பயிா் அறுவடை பரிசோதகா்கள் வீராசாமி, வெங்கடேசன், பிரியங்கா ஆகியோா் செய்திருந்தனா்.

தேவனாம்பட்டினத்தில் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் புதை சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: தேவனாம்பட்டினம் பகுதியில் ஆயிரக்கண... மேலும் பார்க்க

கடலூரில் ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் சோனங்குப்பம் உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா், தண்ணீரில் சேற்றில் மூழ்கி உயிரிழந்தாா். கடலூா் முதுநகரை அடுத்துள்ள சோனங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் சண்முகம் மகன் சைமன் (55), மீன்... மேலும் பார்க்க

பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

சிதம்பரம், அண்ணாமலை நகரை சோ்ந்த நடராஜன் மகன் மணிவண்ணன் (31). தனியாா் பேருந்து நடத்துநா். இவா் வியாழக்கிழமை இரவு பண்ருட்டியில் இருந்து கடலூா் செல்லும் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியில் இருந்தாா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் நடைபயண பிரசார இயக்கம்

கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபயண பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோண்டூா் ஜோதி நகா் திடலில் ... மேலும் பார்க்க