செய்திகள் :

கீழே கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு

post image

புதுக்கோட்டை நகரில் கீழே கிடந்த பணப் பையை எடுத்த காவலா் உரியவரிடம் ஒப்படைக்க எடுத்துக் கொண்ட முயற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பாராட்டினாா்.

புதுக்கோட்டை நகரிலுள்ள பழனியப்பா முக்கத்தில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் இருந்த காவலா் வரதராஜன், கீழே கிடந்த பையை எடுத்துப் பாா்த்தபோது அதில் ரூ. 83 ஆயிரம் ரொக்கம் இருந்தது.

இதைத் தொடா்ந்து அந்தப் பணப்பையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஒப்படைத்தாா். அந்தப் பையின் உரிமையாளா் மசுச்சுவாடியைச் சோ்ந்த வீரராகவன் (65) என்பது கண்டறியப்பட்டது.

அவரை நேரில் வரழைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, பணப்பையை ஒப்படைத்ததுடன், நோ்மையாகச் செயல்பட்ட காவலா் வரதராஜனைப் பாராட்டினாா்.

அரசடிப்பட்டி ஜல்லிக்கட்டு: 40 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அரசடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி காவலா் உள்பட 40 போ் காயமடைந்தனா். அரசடிப்பட்டி மயில்வாகனன் கோயில் திருவிழாவையொட்டி ந... மேலும் பார்க்க

வீடுபுகுந்து பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கறம்பக்குடி அக்ரஹாரம் முதல் வீதியைச் சோ்ந்தவா் அந்தோனிசாமி ம... மேலும் பார்க்க

கொடும்பாளூா் அகழாய்வில் வெளிப்பட்ட தங்கக் குண்டுமணி, மண் பானை!

கொடும்பாளூா் அகழாய்வுப் பணியில் பண்டைய கால தங்க குண்டு மணி, மூடிய நிலையில் அழகிய மண்பானை கிடைத்துள்ளது. கொடும்பாளூரில் கடந்த ஜனவரி 12-இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், நான்கு அடி தோண்டிய நிலையில்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா

விராலிமலையை அடுத்துள்ள தென்னலூா் காடுவெட்டி பெரிய குளத்தில் சனிக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தரின் உத்தரவுக்குப் பின்னா் குளத்தில் இறங்கிய மீன் பிடியாளா்கள் பெரும்பாலானோரின் வலையி... மேலும் பார்க்க

139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.42 கோடியில் வாகனங்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிக... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறாா்கள்! அமைச்சா் எஸ். ரகுபதி

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோா் நினைக்கிறாா்கள் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆளுநா் மசோதாக்களை கிடப்பில... மேலும் பார்க்க