செய்திகள் :

கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!

post image

ஓப்போ எஃப் 31 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை ஓப்போ நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.

கடந்த மார்ச் மாதம், எஃப் 29 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக, எஃப் 31 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இவை செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீழே தவறி விழுந்தாலும் உடையாத வகையில், சேதம் ஏற்படாத வகையில் கவச உரையுடன் தயாரிக்கப்படுகிறது. மேலும், 7,000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் இந்த வரிசை ஸ்மார்ட்போன்களின் சிறப்புகளாக பார்க்கப்படுகின்றன.

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஓப்போ எஃப் 31 வரிசையில், ஓப்போ எஃப் 31 மற்றும் ஓப்போ எஃப் 31 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன.

இந்த, இரு ஸ்மார்ட்போன்களுமே 7,00mAh பேட்டரி திறனுடனும், சேதம் ஏற்படாத வகையில் 360 டிகிரி கவச உரையுடனும் தயாரிக்கப்படுகின்றன.

அலுமினியம் கலவை உரையுடனும் வைரத்தால் வெட்டப்பட்ட மூலைகளுடனும் அதிர்வுகளை தாங்கிக்கொள்ளும் அம்சங்களுடனும் தயாரிக்கப்படுகின்றன.

இயக்கம், செயல்திறன் போன்றவற்றில் எஃப் 29 வரிசை ஸ்மார்ட்போனகளை விட மேம்பட்ட அம்சங்களுடன் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஓப்போ எஃப் 29 ப்ரோவில் உள்ளதைப்போன்று மீடியா டெக்டைமன்சிட்டி புராசஸர் பயன்படுத்தப்படவுள்ளது.

இதையும் படிக்க | ஒரு முறை சார்ஜ் செய்தால் 46 மணிநேரம் பேசலாம்! ஹானர் எக்ஸ் 7 சி அறிமுகம்!

Oppo F31 Series With 7,000mAh Battery Could Launch Next Month: Check Expected Specs, Features

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவு!

புதுதில்லி: வலுவான உள்நாட்டு பங்குச் சந்தைகளின் ஆதரவுடன் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவடைந்தது.பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் ... மேலும் பார்க்க

ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் தொடக்கம்!

இந்தியாவில் ஐபோன் 17 தயாரிப்புப் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஐபோன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் தயாரிப்புப் பணிகள் தொடங்கிய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்த நம்பிக்கையில் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து மூன்றாவது அமர்வாக பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் உயர்ந்து முடிவடைந்தன. டிரம்ப் மற்றும் புடின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையி... மேலும் பார்க்க

ஒரு முறை சார்ஜ் செய்தால் 46 மணிநேரம் பேசலாம்! ஹானர் எக்ஸ் 7 சி அறிமுகம்!

ஹானர் எக்ஸ் 7 சி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (ஆக. 18) அறிமுகமாகியுள்ளது. எனினும், இதன் விற்பனை ஆக. 20ஆம் தேதி முதல் தொடங்கும் என ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹானர் நிறுவனக் கிளைகளிலும், இணைய... மேலும் பார்க்க

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிறுவனத்தின் நிகர கடன் ஜூன் வரையான காலாண்டில் 42 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,637 கோடியாக உள்ளது. அதே வேளையில், நிறுவனம் தனது வலுவான வீட்டுவசதி தேவை... மேலும் பார்க்க

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

புதுதில்லி: கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங், கிரேட்டர் நொய்டா தொழிற்சாலையில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக நம்பிக்கை அறிந்த வட்டாரங்கள் மூலம் தகவல் தெரிய வருகின்றன.சாம்சங் அதன் கிரேட்டர... மேலும் பார்க்க