செய்திகள் :

ஒரு முறை சார்ஜ் செய்தால் 46 மணிநேரம் பேசலாம்! ஹானர் எக்ஸ் 7 சி அறிமுகம்!

post image

ஹானர் எக்ஸ் 7 சி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (ஆக. 18) அறிமுகமாகியுள்ளது. எனினும், இதன் விற்பனை ஆக. 20ஆம் தேதி முதல் தொடங்கும் என ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹானர் நிறுவனக் கிளைகளிலும், இணைய விற்பனை தளங்களிலும் ஹானர் எக்ஸ் 7 சி ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹானர் நிறுவனம் புதிதாக

ஹானர் எக்ஸ் 7 சி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அலுமினியம் சிலிகேட் உலோகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால், மற்ற ஸ்மார்ட்போன்களில் இருந்து முற்றிலும் தரத்தில் மேம்பட்டதாக இருக்கும் என ஹானர் கூறுகிறது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • ஹானர் எக்ஸ் 7சி ஸ்மார்ட்போனில் பேட்டரி முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதில், 5200mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 35W திறன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 59 மணிநேரம் தொடர்ந்து பாடல்களைக் கேட்கலாம்; 46 தொடர்ந்து அழைப்புகளைப் பேசலாம் என ஹானர் கூறுகிறது.

  • அல்ட்ரா பவர் சேவிங் அம்சத்தில் (2% சார்ஜ் இருக்கும்போது கூட) 75 நிமிடங்களுக்கான அழைப்புகளைப் பேச முடியும் என நம்பிக்கை அளிக்கிறது.

  • ஸ்நாப்டிராகன் 4 இரண்டாம் தலைமுறை புராசஸர் கொண்டது. மேஜிக் ஓஎஸ் 8.0 என்ற இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது.

  • நீர் புகாத்தன்மை மற்றும் தூசி படியாதன்மைக்காக IP64 திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் 50M முதன்மை கேமரா கொண்டுள்ளது. 2MP டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 8 மடங்கு ஜூம் செய்துகொள்ள முடியும். செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 5MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • 8GB உள் நினைவகத்துடன் 8GB மெய்நிகர் நினைவகம் (virtual RAM) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்தம் 16GB உள் நினைவகம் கொண்டது. 256GB நினைவகம் உடையது.

  • பச்சை மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | ரூ.10,000-க்கு நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்! அறிமுகமானது இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ!

Honor X7c 5G Launched in India with 5200mAh Battery and 50MP Camera: Check Out Details

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவு!

புதுதில்லி: வலுவான உள்நாட்டு பங்குச் சந்தைகளின் ஆதரவுடன் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவடைந்தது.பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் ... மேலும் பார்க்க

ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் தொடக்கம்!

இந்தியாவில் ஐபோன் 17 தயாரிப்புப் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஐபோன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் தயாரிப்புப் பணிகள் தொடங்கிய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்த நம்பிக்கையில் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து மூன்றாவது அமர்வாக பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் உயர்ந்து முடிவடைந்தன. டிரம்ப் மற்றும் புடின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையி... மேலும் பார்க்க

கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!

ஓப்போ எஃப் 31 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை ஓப்போ நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த மார்ச் மாதம், எஃப் 29 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், இந்த ஆண்டில் இரண்ட... மேலும் பார்க்க

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிறுவனத்தின் நிகர கடன் ஜூன் வரையான காலாண்டில் 42 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,637 கோடியாக உள்ளது. அதே வேளையில், நிறுவனம் தனது வலுவான வீட்டுவசதி தேவை... மேலும் பார்க்க

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

புதுதில்லி: கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங், கிரேட்டர் நொய்டா தொழிற்சாலையில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக நம்பிக்கை அறிந்த வட்டாரங்கள் மூலம் தகவல் தெரிய வருகின்றன.சாம்சங் அதன் கிரேட்டர... மேலும் பார்க்க