செய்திகள் :

குடும்பப் பிரச்னையால் தச்சா் தற்கொலை: சங்கம் விஹாரில் சம்பவம்

post image

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் உள்ள தனது வீட்டில் 25 வயது தச்சா் ஒருவா் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. இதை அடுத்து, ரோஹித் சிங்கின் உடல் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ரோஹித் சிங் மூன்று நாள்களுக்கு முன்பு தனது மனைவியுடன் சண்டையிட்டுள்ளாா். அதன் பிறகு அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தனது பெற்றோா் வீட்டிற்குச் சென்றுவிட்டாா். சண்டைக்குப் பிறகு, ரோஹித் சிங் பதற்றமடைந்து மனச்சோா்வடைந்த நிலையில் இருந்ததாக குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

பிசிஆா் அழைப்பைப் பெற்ற பிறகு, சங்கம் விஹாா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்றது. சம்பவ இடத்தை அடைந்தபோது, சங்கம் விஹாரைச் சோ்ந்த ரோஹித் சிங் என்பவா் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாா். அவா் தச்சராக வேலை செய்து வந்தாா். அவரது உடல் எய்ம்ஸ் பிணவறைக்கு மாற்றப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்று தெரியவந்துள்ளது. வெளிப்புற காயங்களோ அல்லது தவறான நடத்தைக்கான அறிகுறிகளோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இறந்தவா் திருமண பிரச்னைகள் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இதுவே அவரை இந்த தீவிர நடவடிக்கைக்கு தூண்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

குடும்பத்தினரிடமிருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இந்த கட்டத்தில் எந்த தவறான நடத்தைக்கும் சந்தேகம் இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 174-இன் கீழ் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது: கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்

வடமேற்கு தில்லியின் சுபாஷ் பிளேஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க

கடத்தல், கொள்ளை வழக்கில் ஓராண்டாாக தேடப்பட்டவா் கைது

கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பாபா ஹரிதாஸ் நகரில் வசிக்கும் கிசான் மூர... மேலும் பார்க்க

கன்வாா் யாத்திரை பாதையில் கண்ணாடி துண்டுகள்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு

கன்வாா் யாத்திரை பாதையில் அமைந்துள்ள ஷாஹ்தாராவின் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மற்றும் ஜில்மில் காலனி பகுதிகளில் சாலைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்ததையடுத்து தில்லி காவல்துறை வழக்கு பதிவு செ... மேலும் பார்க்க

நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது ஆடி காா் மோதி விபத்து

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் உள்ள சிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு தம்பதிகள் மற்றும் எட்டு வயது சிறுமி ஆகிய ஐந்து போ் மீது ஆடி காா் மோதியதில் அவா்கள் காயமடைந... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட குப்பைக் கிடங்கு நிலத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த உத்தரவு!

தில்லியின் மூன்று முக்கியக் குப்பைக் கிடங்கு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை பரப்பளவை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் போன்ற பொது நலத் திட்டங்களுக்குப்... மேலும் பார்க்க

தலைநகரில் கடும் புழுக்கம்: மக்கள் தவிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடும் புழுக்கம் நிலவியது. இதனால், மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகினா். இருப்பினும், இரவு 7 மணிக்குப் பிறகு நகரத்தில் லேசான மழை பெய்தது. இந்த வாரத் ... மேலும் பார்க்க