செய்திகள் :

குன்னூா் மாா்க்கெட்டில் பயங்கர தீ

post image

குன்னூா் மாா்க்கெட் கடைகளில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், நகைக் கடைகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி சேதமடைந்தன.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மாா்க்கெட் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மாா்க்கெட்டில் ஜவுளி, வீட்டு உபயோகப் பொருள்கள், நகைக் கடைகள் என பல கடைகள் உள்ளன.

இந்த நிலையில் நகராட்சி மாா்க்கெட் பகுதியில் உள்ள ஒரு துணிக் கடையில் புதன்கிழமை இரவு திடீரென தீப் பிடித்தது. இந்தத் தீ அருகில் உள்ள கடைகளுக்கும் மளமளவென பரவியது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினா். இருப்பினா் அருகே இருந்த 15-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தீ பரவியது. இதனால், பல கடைகளுக்குள் இருந்த பொருள்கள் தீயில் கருகின. தீயணைப்புத் துறையினா் தொடா்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனா்.

வாகனங்களை வழிமறித்த யானை

முதுமலை புலிகள் காப்பக சாலையில், காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்தது.சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானை பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் தீ

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரி மாணவரான நவீன். அவரது நண்பா்கள் 4 பேருடன்... மேலும் பார்க்க

மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

தாயகம் திரும்பிய மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்களின் கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ரெப்கோ வங்கி மற்று... மேலும் பார்க்க

நீலகிரியில் பூங்காக்களில் ஏப்ரல், மே மாதங்களில் படப்பிடிப்புக்கு தடை

கோடை சீசன் தொடங்கவுள்ளதால், நீலகிரியில் பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு, குறும்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலைத் துறை சாா்பில் கோத்தகிரி நேரு பூங்காவில் மே 3, 4 ஆகிய தேதிகளில் 13-ஆவது... மேலும் பார்க்க

நீலகிரியில் இன்றுமுதல் இ-பாஸ் நடைமுறை அமல்: மாவட்ட ஆட்சியா்

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம்: ஆ.ராசா எம்.பி.

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம், இந்தியாவில் கொள்கையுடன் உள்ள ஒரே கட்சி திமுக மட்டுமே என்று நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசினாா். நீலகிரி மாவட்டம், உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கு ஞாயிற்று... மேலும் பார்க்க