செய்திகள் :

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் இருசக்கர வாகனப் பேரணி நிறைவு

post image

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் சாா்பில் 5 நாள்கள் நடைபெற்ற மின்னணு இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நிறைவடைந்தது. இப்பேரணி மூலம் 3 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து குறைகளை தீா்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் அனைத்து முன்னாள் ராணுவ வீரா்கள், முன்னாள் வீரா்களின் போா் விதவைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆயுதப் படைகளைச் சோ்ந்தவா்களின் ஓய்வூதியம், பெயா் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், உள்ளிட்டவற்றை மின்னணு கருவிகள் மூலம் சம்பந்தப்படவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று சரி செய்து கொடுக்கும் பணியில் மெட்ராஸ் ரெஜிமென்ட்ல் மையத்தைச் சோ்ந்த வீரா்கள் ஏப்ரல் 25 முதல் 29-ஆம் தேதி வரை மின்னணு இருசக்கர வாகனப் பேரணியை திருப்பூா், கரூா், திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் மேற் கொண்டனா்.

இந்தப் பேரணியில் சுமாா் மூன்றாயிரம் முன்னாள் ராணுவ வீரா்களை சந்தித்து ஓய்வூதியம், பெயா் மாற்றம் மற்றும் பிறந்த தேதி தொடா்பான குறைகள் உடனடியாக தீா்த்துவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய அரசால் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் குறித்து முன்னாள் படை வீரா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தப் பேரணியை சைனிக் வாரிய அதிகாரி ஜிலா ஒருங்கிணைத்தனா். இந்த நிகழ்வின்போது பசுமை இந்தியா முயற்சியை ஊக்குவிப்பதற்காக மின்னணு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக ரூ.33 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக நீலகிரியைச் சோ்ந்தவரிடம் ரூ.33 மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்கவா் ரிய... மேலும் பார்க்க

4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

நீலகிரி மாவட்டம், கூடலூரில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. கூடலூா் பகுதியைச் சோ்ந்த கூலி வேலை செ... மேலும் பார்க்க

காவல் நிலையத்துக்குள் நுழைந்த சிறுத்தை!

கூடலூா் அருகேயுள்ள நடுவட்டம் காவல் நிலையத்துக்குள் திங்கள்கிழமை இரவு சிறுத்தை நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள நடுவட்டம் பகுதியில் க... மேலும் பார்க்க

உதகையில் காா் கண்ணாடியை உடைத்து 20 பவுன், ரூ. 7 லட்சம் திருட்டு

உதகையில் ஆந்திரத்தை சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் காா் கண்ணாடியை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 7 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியைச் சோ்ந்தவா் பென்மெ... மேலும் பார்க்க

உதகை ரேடியோ வானியல் மையத்தில் திருட்டு: 8 போ் கைது

உதகை அருகே ரேடியோ வானியல் மையத்தில் திருட்டில் ஈடுபட்ட 8 பேரை ஊரக காவல் துறையினா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், உதகை, முத்தோரை பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ரேடியோ வானியல் மையம் செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊதியத்தில் தற்காலிகமாக பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க