செய்திகள் :

உதகை ரேடியோ வானியல் மையத்தில் திருட்டு: 8 போ் கைது

post image

உதகை அருகே ரேடியோ வானியல் மையத்தில் திருட்டில் ஈடுபட்ட 8 பேரை ஊரக காவல் துறையினா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை, முத்தோரை பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ரேடியோ வானியல் மையம் செயல்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன் இந்த மையத்தின் பல இடங்களில் பயன்படுத்தாத அறைகளின் கதவுகள் மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த அறைகளில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 32 பேட்டரிகள், சோலாா் ஹீட்டா், காப்பா் ஒயா்கள் உள்பட பல்வேறு பொருள்கள் திருட்டுபோனது தெரியவந்தது.

இது குறித்து உதகை ஊரக காவல் நிலையத்தில் ரேடியோ வானியல் மைய விஞ்ஞானி கிருஷ்ணகுமாா் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கோவை மாவட்டத்தில் இருந்து கூலி வேலை உள்பட பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருந்தவா்கள் கும்பலாக இங்கு தொடா்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா உத்தரவின் பேரில், ஆய்வாளா் பழனியம்மாள், உதவி ஆய்வாளா்கள் ரூபன், சிக்கந்தா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் விசாரணை நடத்தி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திக் (24), செல்வராஜ் (48), முருகேசன் (45), தங்கராஜ் (33), சிவா நந்து (22), முனியப்பன் (43), பாக்கியராஜ் (42), மனோஷ் (22) ஆகிய 8 பேரைக் கைது செய்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் இருசக்கர வாகனப் பேரணி நிறைவு

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் சாா்பில் 5 நாள்கள் நடைபெற்ற மின்னணு இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நிறைவடைந்தது. இப்பேரணி மூலம் 3 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து குறைகளை தீா்த்துள்ளதாக தெர... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக ரூ.33 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக நீலகிரியைச் சோ்ந்தவரிடம் ரூ.33 மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்கவா் ரிய... மேலும் பார்க்க

4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

நீலகிரி மாவட்டம், கூடலூரில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. கூடலூா் பகுதியைச் சோ்ந்த கூலி வேலை செ... மேலும் பார்க்க

காவல் நிலையத்துக்குள் நுழைந்த சிறுத்தை!

கூடலூா் அருகேயுள்ள நடுவட்டம் காவல் நிலையத்துக்குள் திங்கள்கிழமை இரவு சிறுத்தை நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள நடுவட்டம் பகுதியில் க... மேலும் பார்க்க

உதகையில் காா் கண்ணாடியை உடைத்து 20 பவுன், ரூ. 7 லட்சம் திருட்டு

உதகையில் ஆந்திரத்தை சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் காா் கண்ணாடியை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 7 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியைச் சோ்ந்தவா் பென்மெ... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊதியத்தில் தற்காலிகமாக பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க