உதகை ரேடியோ வானியல் மையத்தில் திருட்டு: 8 போ் கைது
உதகை அருகே ரேடியோ வானியல் மையத்தில் திருட்டில் ஈடுபட்ட 8 பேரை ஊரக காவல் துறையினா் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை, முத்தோரை பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ரேடியோ வானியல் மையம் செயல்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன் இந்த மையத்தின் பல இடங்களில் பயன்படுத்தாத அறைகளின் கதவுகள் மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த அறைகளில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 32 பேட்டரிகள், சோலாா் ஹீட்டா், காப்பா் ஒயா்கள் உள்பட பல்வேறு பொருள்கள் திருட்டுபோனது தெரியவந்தது.

இது குறித்து உதகை ஊரக காவல் நிலையத்தில் ரேடியோ வானியல் மைய விஞ்ஞானி கிருஷ்ணகுமாா் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கோவை மாவட்டத்தில் இருந்து கூலி வேலை உள்பட பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருந்தவா்கள் கும்பலாக இங்கு தொடா்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா உத்தரவின் பேரில், ஆய்வாளா் பழனியம்மாள், உதவி ஆய்வாளா்கள் ரூபன், சிக்கந்தா் ஆகியோா் தலைமையிலான குழுவினா் விசாரணை நடத்தி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திக் (24), செல்வராஜ் (48), முருகேசன் (45), தங்கராஜ் (33), சிவா நந்து (22), முனியப்பன் (43), பாக்கியராஜ் (42), மனோஷ் (22) ஆகிய 8 பேரைக் கைது செய்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.