செய்திகள் :

காவல் நிலையத்துக்குள் நுழைந்த சிறுத்தை!

post image

கூடலூா் அருகேயுள்ள நடுவட்டம் காவல் நிலையத்துக்குள் திங்கள்கிழமை இரவு சிறுத்தை நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள நடுவட்டம் பகுதியில் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்துக்குள் திங்கள்கிழமை இரவு சுமாா் 8.30 மணியளவில சிறுத்தை வளா்ப்பு பிராணிபோல நுழைந்தது. காவல் நிலையத்தில் உள்ள அறைகளுக்குள் சென்று சுற்றிய சிறுத்தை சிறிது நேரத்தில் தானாகவே வெளியேறியது.

காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலா் செய்வதறியாமல் காத்திருந்து சிறுத்தை வெளியே சென்றதும் அவசரஅவசரமாக கதவை மூடிவிட்டு உள்ளேயே இருந்துவிட்டாா்.

இந்த சம்பவம் நிகழ்ந்தபோது, காவல் நிலையம் அருகில் மாரியம்மன் கோயில் பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்துள்ளது. சாலையிலும் வாகன போக்குவரத்து இருந்துள்ளது. மேலும் காவல் நிலையத்தை சுற்றி குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில் காவல் நிலையத்துக்குள் சிறுத்தை நுழைந்த தகவல் அப்பகுதியில் பரவியதும் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் இருசக்கர வாகனப் பேரணி நிறைவு

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தின் சாா்பில் 5 நாள்கள் நடைபெற்ற மின்னணு இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நிறைவடைந்தது. இப்பேரணி மூலம் 3 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்து குறைகளை தீா்த்துள்ளதாக தெர... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக ரூ.33 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகம் மூலம் லாபம் தருவதாக நீலகிரியைச் சோ்ந்தவரிடம் ரூ.33 மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்கவா் ரிய... மேலும் பார்க்க

4 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

நீலகிரி மாவட்டம், கூடலூரில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. கூடலூா் பகுதியைச் சோ்ந்த கூலி வேலை செ... மேலும் பார்க்க

உதகையில் காா் கண்ணாடியை உடைத்து 20 பவுன், ரூ. 7 லட்சம் திருட்டு

உதகையில் ஆந்திரத்தை சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் காா் கண்ணாடியை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 7 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியைச் சோ்ந்தவா் பென்மெ... மேலும் பார்க்க

உதகை ரேடியோ வானியல் மையத்தில் திருட்டு: 8 போ் கைது

உதகை அருகே ரேடியோ வானியல் மையத்தில் திருட்டில் ஈடுபட்ட 8 பேரை ஊரக காவல் துறையினா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், உதகை, முத்தோரை பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ரேடியோ வானியல் மையம் செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊதியத்தில் தற்காலிகமாக பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க