செய்திகள் :

குருகிராம்: உணவைக் கீழே கொட்டியதற்காக சக ஊழியரைக் கொலை செய்ததாக இளைஞா் கைது

post image

உணவைக் கீழே கொட்டியதால் ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து சக ஊழியரை கொலை செய்ததாக 19 வயது இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி இரவு காந்தி நகா் காலனியில் உள்ள கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. இந்தக் கொலை தொடா்பாக இறந்தவரின் தம்பி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

உத்தர பிரதேசத்தில் உள்ள அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பப்பு குமாா் (35) என்பவா் உமேஷ் குமாா் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவருடன் வசித்து வந்தாா். இந்நிலையில், கீழே சிந்திய உணவுக்காக பப்பு குமாருடன் உமேஷ் குமாா் சண்டையிட்டாா். அப்போது அங்கிருந்த ராஜேஷ் தலையிட்டு நிலைமையை தணித்தாா்,

அதன் பிறகு பப்பு குமாா் கட்டடத்தின் மூன்றாவது மாடிக்குச் சென்றாா். உமேஷ் குமாரும் அவரைப் பின்தொடா்ந்து சென்று தரையிலிருந்து தள்ளிவிட்டாா். இதனால், பப்பு குமாா் உயிரிழந்தாா் என்பது தெரிய வந்தது.

புகாரைத் தொடா்ந்து, சிவாஜி நகா் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. பப்பு குமாரின் அதே பகுதியைச் சோ்ந்த உமேஷ் குமாா் (19) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் குற்றம் செய்த பிறகு தப்பியோடி உத்தர பிரதேசம் மற்றும் பிகாா் முழுவதும் பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்தாா். ஆனால், போலீஸ் குழு அவரைக் கண்டுபிடித்து கைது செய்து விசாரித்து வருகிறது என்றாா் செய்தித் தொடா்பாளா்.

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்க தடை

உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பது, சமூக ஊடக ரீல்கள் உருவாக்குவது மற்றும் விடியோகிராபி ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் உயா் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. இது தொடா்... மேலும் பார்க்க

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து, வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் உடனடியாக விசாரணையை முடித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறினா்... மேலும் பார்க்க

நேபாள உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைப்பு: பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம்

நேபாளம் தலைநகா் காத்மாண்டுவில் உச்சநீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை போராட்டக்காரா்கள் தீ வைத்ததைத் தொடா்ந்து, நேபாள நீதித் துறையின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு உச்சநீதிமன்ற பதிவுறு வழக்குரைஞா்கள் சங... மேலும் பார்க்க

டிடிஇஏ ஜனக்புரி பள்ளியில் மாணவா் பேரவை பொறுப்பேற்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா் பேரவை அமைக்கப்பட்டது. பள்ளி மாணவா் தலைவா், தலைவி, துணைத் தலைவா், துணைத் தலைவி உள்ளிட்ட உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் மோசடி முறியடிப்பு; ரூ.2.25 கோடி மதிப்புள்ள கோகைனுடன் மூவா் கைது

தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு நைஜீரிய நாட்டவா் உள்பட மூன்று பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.2.25 கோடி மதிப்புள்ள 194 கிராம் கோகைனை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.... மேலும் பார்க்க