செய்திகள் :

குற்றவியல் வழக்குகள் கோடிக்கணக்கில் நிலுவை: மத்திய அமைச்சகம் தகவல்

post image

நாட்டில் கோடிக்கணக்கான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தில் மட்டும் 17,647 குற்றவியல் வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 18.3 லட்சம் வழக்குகளும், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 3.46 கோடி வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் கூறியது.

அவற்றில், தமிழகத்தில் மட்டும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 7.72 வழக்குகள், சாட்சியம் தொடர்பான நிலுவையில் உள்ளன.

இதையும் படிக்க:திருப்பதியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

இதனிடையே, திண்டிவனம் அருகே உள்ள சரசுவதி சட்டக் கல்லூரியில் தேசிய நியாய சன்ஹிதாவின் சட்ட அம்சங்கள் மற்றும் இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் தாக்கங்கள் குறித்த தேசிய மாநாடு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ்குமார் பேசியதாவது, ``இன்றைக்கு சட்ட வழக்குகளில் பலர் நியாயங்களை பெற்று வந்தாலும், குற்ற வழக்குகளில் இந்தியா முழுவதும் சரியான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் 70 முதல் 90 சதவிகித வழக்குகள்வரையில் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இதனால், குற்றவாளிகள் தப்பித்தும் விடுகின்றனர். இதற்கு காரணம் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு இல்லாததுதான். தேசிய நியாய சன்ஹிதா சட்டம் பலருக்கு பாதுகாப்பு அளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவ... மேலும் பார்க்க

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ‘நாட்டின் எல்லைப் பக... மேலும் பார்க்க

தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனை: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

‘அவரவா் தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டத... மேலும் பார்க்க

கேள்வி நேரத்துக்கு பதிலாக விவாதம்: மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் மற்றும் தனிநபா் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்கு பதிலாக உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிர... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது: அமித் ஷா உறுதி

‘பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது’ என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘நக்ஸல் தீவிரவாதம் வரும் 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முழுமையாக ஒழிக்கப்படும்’ என்று ... மேலும் பார்க்க