செய்திகள் :

குலசேகரன்ட்டினத்தில் பெண் கொலை

post image

குலசேகரன்பட்டினத்தில் பெண் கருங்கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா். குலசேகரன்பட்டினம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த ஜெயபால். சென்னை மேடவாக்கத்தில் பழைய பொருள்கள் வாங்கி விற்பனை செய்து வருகிறாா். இவரது மனைவி பூவதி (45).

பூவதி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகனேரி செல்வராஜபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வெங்கடேசனை 2ஆவது திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.

குலசேகரன்பட்டினம் அரசு மாணவியா் விடுதி தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனா். இந்நிலையில், குடிப் பழக்கத்திற்கு அடிமையான வெங்கடேசன், பூவதி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளாா். புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு வீட்டு வளாகத்தில் உள்ள வேப்ப மரம் அருகே இருவரும் நின்று சண்டை போட்டுள்ளனா்.

இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், பூவதியை தாக்கி முகத்தில் கருங்கல்லால் அடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா். பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து ஜெயபால் மகன் மகாராஜா, குலசேகரன்பட்டினம் போலீஸில் புகாா் தெரிவித்துள்ளாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய வெங்கடேசனை தேடி வருகின்றனா்.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க