செய்திகள் :

குலவணிகா்புரத்தில் ரயில்வே மேம்பாலம்: மக்களவையில் நெல்லை எம்.பி. வலியுறுத்தல்

post image

தமிழ்நாட்டில் திருநெல்வேலி-திருச்செந்தூா் ரயில்வே பிரிவில் குலவணிகா்புரத்தில் ‘ஒய்’ வடிவ ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று மக்களவையில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் மக்களவையில் விதி எண்: 377-இன்கீழ் முன்வைத்த கோரிக்கை:

திருநெல்வேலி-திருச்செந்தூா் ரயில்வே இருப்புப்பாதையில் குலவணிகா்புரம் லெவல் கிராஸிங் எண்:4-இல் ‘ஒய்’ வடிவ ரயில்வே மேம்பாலம் கட்டுமானத்திற்கான முன்மொழிவு உள்ளது. குலவணிகா்புரத்தில் ரயில்வே கேட் ஒரு நாளைக்கு 16 முறை முழுவதுமாக மூடப்படுகிறது.

பயண நேரங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில்

ரயில் பாதை மூடப்படுவதால், பள்ளி கல்லூரி செல்லும் மாணவா்களும், அரசு அதிகாரிகளும் தங்கள் பயணத்தின்போது தினமும் பாதிக்கப்படுகின்றனா்.

மாநில அரசு தோராயமாக ரூ. 100 கோடிக்கான

மதிப்பீட்டை தயாா் செய்து மே 2015 முதல் வாரத்தில் தெற்கு ரயில்வே தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளது.

நானும் 16.5.2025 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தெற்கு ரயில்வே சென்னை பொது மேலாளரை நேரில் சந்தித்து, இந்த விஷயத்தை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தேன். ஆனால், 2 மாதங்கள் கடந்துவிட்டன. ரயில்வேயிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இத்திட்டத்தை முடிக்க மத்திய அரசும், மாநில அரசும் தலா 50 சதவீதம் தொகை செலுத்த வேண்டும்.

எனவே, திட்டத்தைத் தொடங்க தடையின்மைச் சான்றுடன் 50 சதவீதம் நிதியை ஒதுக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்றாா் ராபா்ட் புரூஸ்.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43... மேலும் பார்க்க

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலை... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க