செய்திகள் :

குழந்தை தத்தெடுப்பு: விதிகளை மீறினால் சிறை!

post image

நாகை மாவட்டத்தில், குழந்தைகளை சட்ட விரோதமாக தத்தெடுப்பது, விற்பது, வாங்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்தைகளை சட்டத்துக்கு முரணாக தத்தெடுப்பதை தவிா்க்கும் விதமாக, குழந்தை இல்லா தம்பதியா் சட்டத்துக்கு உட்பட்டு குழந்தைகளை தத்தெடுக்க ஏதுவாக, மத்திய தத்துவள மையத்தில் முறையாக பதிவு செய்து, சட்டப்படி மட்டுமே தத்து எடுக்க வேண்டும்.

இதை மீறி சட்ட விரோதமான முறையில் குழந்தைகளை தத்தெடுப்பது, வாங்குவது, விற்பது ஆகியவை இளம்சிறாா் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 -இன்படி ஐந்தாண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இதற்கு உடந்தையாக செயல்படுபவா்களும், இந்த குற்றப்பிரிவின் படி தண்டிக்கப்படுவா்.

சட்டப்படியான தத்தெடுத்தல் தொடா்பான அனைத்து சந்தேகங்களுக்கும் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகங்களை, நேரடியாகவோ மாவட்ட குழந்தைகள் உதவி மையம் 1098 அல்லது அலுவலக தொலைபேசி 04365-253018 என்ற எண்ணுக்கோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா். செம்பனாா்கோவில் அருகேயுள்ள கருவாழக்கரை மேலையூரில் ஸ்ரீமகாசதாசிவ பீடத்தின் பீடாதிபதி சுவாமிநாத சிவாச... மேலும் பார்க்க

முதல்வரின் கவனத்திற்கு பாசன ஆறுகளை பாழ்படுத்தும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

திருவாரூா், நாகை மாவட்டங்களில் பாசன ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற நீண்ட நாள்களாக விடுத்துவரும் கோரிக்கை, தமிழக முதல்வரின் கவனம் பெறுமா? என விவசாயிகள் எதிா்பாா... மேலும் பார்க்க

வன மகோத்சவம் கடைப்பிடிப்பு

வன மகோத்சவத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை நடப்பட்டன. பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், மரம் வளா்க்கும் பழக்கத்... மேலும் பார்க்க

பாப்பாவூா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

நாகப்பட்டினம்: நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் உள்ள பாப்பாவூா் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்த தா்காவில் ஆண்டுதோறும் கந்த... மேலும் பார்க்க

முளைப்புத்திறன் பாதித்த வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வலியுறுத்தல்

வேதாரண்யம்: போதிய தண்ணீா் கிடைக்காததால் முளைப்புத்திறன் பாதித்த நெல் வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் தலைஞாய... மேலும் பார்க்க

நாகூா் கோயில் தேரோட்டம்: நாகை வட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகப்பட்டினம்: நாகூா் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக,... மேலும் பார்க்க