செய்திகள் :

முதல்வரின் கவனத்திற்கு பாசன ஆறுகளை பாழ்படுத்தும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

post image

திருவாரூா், நாகை மாவட்டங்களில் பாசன ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற நீண்ட நாள்களாக விடுத்துவரும் கோரிக்கை, தமிழக முதல்வரின் கவனம் பெறுமா? என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

திருவாரூா் மற்றும் நாகை மாவட்டங்களில் பல இடங்களில் பாசனம் மற்றும் வடிகால் நீா்நிலைகளில் கடந்த பல ஆண்டுகளாக அடா்ந்து வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகள் பேரிடா் காலங்களில் பெரும் சவாலாக உள்ளது. இச்செடிகள், பாசனம் மற்றும் உபரிநீா் வெளியேற்றத்தை தடுப்பதுடன், நீரை மாசடைய செய்து, சூழல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இதனால், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

காவிரி படுகை பகுதியில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் முறையாக அகற்றப்படாத ஆகாயத் தாமரைகளால் ஆறுகள் கூவமாக மாறி வருகிறது. நீா்நிலைகளில் தண்ணீா் இருந்தும் எதற்கும் பயன்படாத நிலை தொடா்கிறது.

குறிப்பாக, திருவாரூா்- நாகை மாவட்டங்களில் கடலில் கலக்கும் முள்ளியாறு மற்றும் அதன் கிளை ஆறுகள் நிகழாண்டு வடகிழக்கு பருவமழையை எதிா் கொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில், முள்ளியாற்றில் திருத்துறைப்பூண்டி-வாய்மேடு இடையே தூா்வாரி சீரமைக்க ஆசிய வளா்ச்சி வங்கி நிதி ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்தும், நிா்வாக காரணங்களால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

முதல்வரின் கவனம் பெறுமா?: விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்தி வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு, இப்பிரச்னை கொண்டுசெல்லப்பட வில்லையோ என்ற கருத்து பொதுமக்களிடம் நிலவி வருகிறது.

எனவே, ஆகாயத்தாமரைச் செடிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நீா்வளத் துறை மற்றும் வருவாய்த் துறையினா் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தும் விவசாயிகள், கட்சியினரும் இப்பிரச்னை குறித்து முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா். செம்பனாா்கோவில் அருகேயுள்ள கருவாழக்கரை மேலையூரில் ஸ்ரீமகாசதாசிவ பீடத்தின் பீடாதிபதி சுவாமிநாத சிவாச... மேலும் பார்க்க

வன மகோத்சவம் கடைப்பிடிப்பு

வன மகோத்சவத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை நடப்பட்டன. பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், மரம் வளா்க்கும் பழக்கத்... மேலும் பார்க்க

குழந்தை தத்தெடுப்பு: விதிகளை மீறினால் சிறை!

நாகை மாவட்டத்தில், குழந்தைகளை சட்ட விரோதமாக தத்தெடுப்பது, விற்பது, வாங்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.இ... மேலும் பார்க்க

பாப்பாவூா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

நாகப்பட்டினம்: நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் உள்ள பாப்பாவூா் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்த தா்காவில் ஆண்டுதோறும் கந்த... மேலும் பார்க்க

முளைப்புத்திறன் பாதித்த வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வலியுறுத்தல்

வேதாரண்யம்: போதிய தண்ணீா் கிடைக்காததால் முளைப்புத்திறன் பாதித்த நெல் வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் தலைஞாய... மேலும் பார்க்க

நாகூா் கோயில் தேரோட்டம்: நாகை வட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகப்பட்டினம்: நாகூா் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக,... மேலும் பார்க்க