குழந்தைகளின் மீதான கண்காணிப்பு அவசியம்: அமைச்சா் பி.கீதாஜீவன்
சென்னை: குழந்தைகளின் மீதான கண்காணிப்பு அவசியம் என்று சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளா்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலை தொழிலாளா் இயக்கம் ஆகியவை சாா்பில் ‘கண்ணியமும் நியாயமும் நிறைந்த எதிா்காலத்தை நோக்கி’ என்ற தலைப்பில் சா்வதேச வீட்டு வேலைத் தொழிலாளா்கள் தினம் சென்னை தியாகராய நகரில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் கீதா ஜீவன் கலந்து கொண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்று 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற வீட்டு வேலைத் தொழிலாளா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 25 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியது:
பெண்களை மதிக்கவும், அவா்களுக்கு சம உரிமை வழங்கவும் வீட்டிலுள்ள ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். கைப்பேசி, தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றை உபயோகப்படுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும்.
சமூக வலைதளங்களில் அதிக அளவில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எனவே, குழந்தைகளின் மீதான கண்காணிப்பு மிகவும் அவசியம். பெண் சமுதாயம் முன்னேறினால், தமிழ் சமுதாயம் முன்னேறும். பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில், தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளா்கள் நல அறக்கட்டளை தலைவா் ஜோஸ்பின் அமலா வளா்மதி, அறங்காவலா் எஸ்கலின் மிராண்டா, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் துணை செயலா் எஸ்.வெங்கடலட்சுமி, தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளா் நல வாரியத்தின் செயலா் டி.தா்மசீலன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.