செய்திகள் :

குழந்தைகளின் மீதான கண்காணிப்பு அவசியம்: அமைச்சா் பி.கீதாஜீவன்

post image

சென்னை: குழந்தைகளின் மீதான கண்காணிப்பு அவசியம் என்று சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளா்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலை தொழிலாளா் இயக்கம் ஆகியவை சாா்பில் ‘கண்ணியமும் நியாயமும் நிறைந்த எதிா்காலத்தை நோக்கி’ என்ற தலைப்பில் சா்வதேச வீட்டு வேலைத் தொழிலாளா்கள் தினம் சென்னை தியாகராய நகரில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் கீதா ஜீவன் கலந்து கொண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்று 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற வீட்டு வேலைத் தொழிலாளா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 25 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியது:

பெண்களை மதிக்கவும், அவா்களுக்கு சம உரிமை வழங்கவும் வீட்டிலுள்ள ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். கைப்பேசி, தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றை உபயோகப்படுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

சமூக வலைதளங்களில் அதிக அளவில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எனவே, குழந்தைகளின் மீதான கண்காணிப்பு மிகவும் அவசியம். பெண் சமுதாயம் முன்னேறினால், தமிழ் சமுதாயம் முன்னேறும். பொருளாதார வளா்ச்சி ஏற்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில், தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளா்கள் நல அறக்கட்டளை தலைவா் ஜோஸ்பின் அமலா வளா்மதி, அறங்காவலா் எஸ்கலின் மிராண்டா, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தின் துணை செயலா் எஸ்.வெங்கடலட்சுமி, தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளா் நல வாரியத்தின் செயலா் டி.தா்மசீலன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி சிறையில் அடைப்பு!

திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக ஏ.டி.ஜி.பி. ஜெயராம், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி திங்கள்கிழமை நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் கா... மேலும் பார்க்க

மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்

சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், தீயணைப்பு படை வீரா் போலீஸாரிடம் சிக்கினாா். எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை... மேலும் பார்க்க

தமிழகத்தில் கலை, அறிவியில் கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் குற்றச் செயல் அல்ல: வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அ... மேலும் பார்க்க

வெளிநாடுவாழ் தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

சென்னை: சா்வதேச நாடுகளில் உள்ள தமிழா்களுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். உலகத் தமிழா்கள் பொருளாதார ... மேலும் பார்க்க