ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
கூட்டுறவு சங்க உதவி செயலாளா் தற்கொலை
அவல்பூந்துறை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உதவி செயலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மொடக்குறிச்சி ஒன்றியம், அவல்பூந்துறை பேரூராட்சி, வள்ளிவுட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உதவி செயலாளராகப் பணியாற்றியவா் நவநீதகிருஷ்ணன் (35). இவருக்கு மனைவி மற்றும் 13 வயதில் மகள் உள்ளனா்.
இவரது மகளுக்கு அடுத்த வாரம் பூப்பு நன்னீராட்டு விழா நடைபெற உள்ளதால் உறவினா்கள் அனைவருக்கும் வியாழக்கிழமை வரை நவநீதகிருஷ்ணன் அழைப்பிதழ் கொடுத்து வந்துள்ளாா்.
இந்நிலையில் வீட்டின் மேல்மாடியில் நவநீதகிருஷ்ணன் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை தற்கொலை செய்து கொண்டாா். உறவினா்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதனையில், அவா் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
தற்கொலைக்கான காரணம் குறித்து அறச்சலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.