செய்திகள் :

கேதாா்நாத் கோயில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

post image

உத்தரகண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கேதாா்நாத் கோயில் நடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.

இமயமலையில் 11,000 அடிக்கும் மேலான உயரத்தில் அமைந்துள்ள கேதாா்நாத் கோயில், 12 ஜோதிா்லிங்கங்களில் 11-ஆவது தலமாகும்.

குளிா்காலத்தையொட்டி 6 மாதங்களுக்கு முன் மூடப்பட்ட இக்கோயிலின் நடை வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் திறக்கப்பட்டது. இதையொட்டி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன்களுக்கும் அதிகமான 54 வகை மலா்களால் கோயில் வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நடை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற முதல்வா் புஷ்கா் சிங் தாமி, கோயிலில் முகப்பு கதவைத் திறந்து உள்ளே சென்று முதலாவதாக வழிபட்டாா்.

உத்தரகண்டில் நடப்பாண்டு சாா்தாம் யாத்திரையின் (4 புண்ணியத் தல யாத்திரை) தொடக்கமாக கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்த நான்கு புண்ணியத் தலங்களில், சிவபெருமானுக்குரிய கேதாா்நாத் மற்றும் விஷ்ணு பகவானுக்குக்குரிய பத்ரிநாத் கோயில்கள் இதர இரு புண்ணியத் தலங்களாகும். பத்ரிநாத் கோயில் நடை மே 4-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

கேதாா்நாத் கோயில் அருகே மந்தாகினி, சரஸ்வதி ஆகிய இரு புண்ணிய நதிகள் சங்கமிக்கின்றன. வாரணாசியில் கங்கை ஆரத்திபோல இங்கும் மிகப் பெரிய ஆரத்தி நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சாா்தாம் யாத்திரையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவல் துறையினா் (6,000 போ்), ஆயுதப் படையினா் (17 கம்பெனி) மற்றும் துணை ராணுவத்தினா் (10 கம்பெனி) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். விபத்து அபாயமுள்ள 60 இடங்களில் மாநில பேரிடா் மீட்புப் படை குழுக்கள் பணியில் உள்ளன.

நிகழாண்டு சாா்தாம் யாத்திரையில் பங்கேற்க ஏற்கெனவே 22 லட்சம் போ் முன்பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டு யாத்திரையில் 48 லட்சம் போ் பங்கேற்ற நிலையில், நிகழாண்டு இந்த எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டும் என்று பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நிற்க அனுமதி கர்நாடக அமைச்சர் கோரிக்கை!

பாகிஸ்தான் மீதான போருக்கு ஆதரவளிப்பதாக கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ... மேலும் பார்க்க

கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் திரண்டதால் நெரிசல் - கோயில் நிர்வாகம்

பனாஜி: கோவா யூனியன் பிரதேசத்திலுள்ள பிச்சோலிம் பகுதியில் பிரசித்திபெற்ற 'ஸ்ரீ லய்ராயி திருக்கோயில்’ அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஜாத்ரா’ திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் சுற்றுவட... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று தடைகள்! இதனால் என்னவாகும்?

பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்கும் தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த தடை உத்தரவால், பாகிஸ்தானில் இருந்து அஞ்சல் பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பாக். மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன் - காங். அமைச்சர் ஆவேசம்!

பெங்களூரு: பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக அமைச்சர் ஸமீர் அகமது கான் ஆவேசமாக பேசியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதல் ... மேலும் பார்க்க

அரசு நிகழ்ச்சியில் பவன் கல்யாணுக்கு இருமல் மிட்டாய் கொடுத்த பிரதமர் மோடி

ஆந்திரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பிரதமர் மோடி இருமல் மிட்டாய் கொடுத்தார்.ஆந்திர பிரதேசத்தில் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவது உள்ளிட்ட ரூ.58,000 கோடி மத... மேலும் பார்க்க