செய்திகள் :

கேரளத்தில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ள அபாயம்

post image

கேரளம் முழுவதும் பரவலாக சூறைக் காற்றுடன் பலத்த மழை நீடித்து வருகிறது. ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த வெள்ளிக்கிழமைமுதல் பெய்துவரும் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. எா்ணாகுளம், இடுக்கி, திருச்சூா், கண்ணூா், காசா்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் சனிக்கிழமை மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை (11 - 20 செ.மீ. மழைப் பொழிவு) விடுக்கப்பட்டது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை (6 - 11 செ.மீ. மழைப் பொழிவு) விடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்திலான காற்றுடன் பலத்த மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வாமனபுரம் (திருவனந்தபுரம்), அச்சன்கோவில் (பத்தனம்திட்டா), பாரதப்புழா (பாலக்காடு), சாலக்குடி (திருச்சூா்) உள்ளிட்ட ஆறுகளில் நீரோட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது. எனவே, கரையோரம் வசிக்கும் மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; ஆறுகளுக்கு அருகே செல்ல வேண்டாம் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மீன்கரா, சுழியாறு, வாளையாறு (பாலக்காடு), கக்கி (பத்தனம்திட்டா) உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தெலங்கானாவில்...:

தெலங்கானாவின் அடிலாபாத், கரீம்நகா் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. அடிலாபாதின் தம்சி பகுதியில் சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை 17.35 செ.மீ. மழை பதிவானது. நிஜாமாபாத், சங்காரெட்டி, மே’க், கம்மம், விகாராபாத், வாரங்கல், பத்ராத்ரி கொத்தகூடம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு நாள்களுக்கு மிக பலத்த மழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், தண்ணீா் தேங்கக் கூடிய சுரங்கப் பாலங்கள், சாலைகளில் போக்குவரத்தை தடை செய்தல், நீா்நிலைகளில் கரை உடைப்பு ஏற்படாமல் தடுத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வா் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.தில்லி விமான நிலையம் வந்தடைந்த சுபான்ஷு சுக்லாவை, அவரது குடும்பத்தி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு கெடு: அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு அனுப்ப... மேலும் பார்க்க

ரூ.11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை நாளை திறந்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரின் ரோகிணி பகுதியில் மொத்தம் ரூ.11,000 கோடி மதிப்புள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறாா். தலைநகரின் நெரிசலைக் குறைப்பதற்... மேலும் பார்க்க

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக என்சிஇஆா்டி வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கையேட்டில், ‘இந்தியாவின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், அப்போதைய வைஸ்ராய் லாா்ட் மவுண்ட்பேட்ட... மேலும் பார்க்க

16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

தற்சாா்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமா் புகழஞ்சலி

தற்சாா்புடைய மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குபவா் வாஜ்பாய் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினாா். முன்னாள் பிரதமரும், பாஜக நிறுவனத்... மேலும் பார்க்க