செய்திகள் :

கேரளம்: பெண்ணை பலாத்காரம் செய்ததாக யூடியூபர் கைது

post image

சமூக ஊடகங்கள் வாயிலாக நட்பாகப் பழகிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 25 வயது யூடியூபர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், களமசேரி போலீஸார், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது நிஷாலை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சேபகரமான விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி, பெண்ணை யூடியூபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இணையதள முடக்கம்! முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்!

மேலும் அந்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கும் அனுப்பிவிடுவதாக யூடியூபர் மிரட்டியதாக போலீஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற வழக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறினர்.

பின்னர் யூடியூபர் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.அதனை முறையாக பராமரிக்கவும் வே... மேலும் பார்க்க