செய்திகள் :

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி: குமுதா பள்ளி மாணவி தங்கப் பதக்கம்

post image

நம்பியூா் குமுதா பள்ளி மாணவி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

கேலோ இந்திய இளைஞா் விளையாட்டு 2025 -ஆம் ஆண்டுக்கான தெரிவுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில், 18 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் பெண்கள் கையுந்து பந்து போட்டிக்கு தமிழக அணிக்காக குமுதா பள்ளி மாணவி யோகிஸ்ரீ உள்பட 14 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, பிகாா் மாநிலம், பாட்னாவில் அன்மையில் நடைபெற்ற கேலோ இந்திய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றனா்.

இதில், இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்காள அணியை வென்று தமிழ்நாடு அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

தமிழ்நாடு அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்ற குழு வீராங்கனை குமுதா பள்ளி மாணவி யோகிஸ்ரீயை ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சாலமன், பள்ளித் தாளாளா் ஜனகரத்தினம், துணை தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலாளா் டாக்டா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, முதல்வா் மஞ்சுளா, துணை முதல்வா் வசந்தி, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க