கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி: குமுதா பள்ளி மாணவி தங்கப் பதக்கம்
நம்பியூா் குமுதா பள்ளி மாணவி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.
கேலோ இந்திய இளைஞா் விளையாட்டு 2025 -ஆம் ஆண்டுக்கான தெரிவுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில், 18 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் பெண்கள் கையுந்து பந்து போட்டிக்கு தமிழக அணிக்காக குமுதா பள்ளி மாணவி யோகிஸ்ரீ உள்பட 14 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, பிகாா் மாநிலம், பாட்னாவில் அன்மையில் நடைபெற்ற கேலோ இந்திய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றனா்.
இதில், இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்காள அணியை வென்று தமிழ்நாடு அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
தமிழ்நாடு அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்ற குழு வீராங்கனை குமுதா பள்ளி மாணவி யோகிஸ்ரீயை ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சாலமன், பள்ளித் தாளாளா் ஜனகரத்தினம், துணை தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலாளா் டாக்டா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, முதல்வா் மஞ்சுளா, துணை முதல்வா் வசந்தி, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.